உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

ஞாயிறு, 20 மார்ச், 2022

'mother a 186 கருக்கடலிலிருந்து சீறி வந்த ராட்சத ஏவுகணை!

கருக்கடலிலிருந்து சீறி வந்த ராட்சத ஏவுகணை! உக்ரைனில் நடந்த கொடூரம் உக்ரைனில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி உள்ளன. உக்ரைனில் உள்ள மரியபோல் நகரத்தில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அசோவ் கடல் பகுதியில் இருக்கும் துறைமுகம் ஆகும் இது. இந்த துறைமுக நகரத்தை சில நாட்களுக்கு முன் ரஷ்ய படைகள் சுற்றி வளைத்தன. இப்போது நான்கு பக்கங்களில் இருந்தும் இங்கு ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இங்கு ரஷ்ய படைகள் கொடூரமான தாக்குதல்களை நடத்துவதாகவும், பல நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த கொடுமையின் சுவடுகள் மறையாது என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மொத்தமாக இடிந்துவிழுந்தது. இந்த பள்ளி தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்கு உள்ளே மக்கள் சிக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மரியபோல் நகரத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மொத்தமாக இடிந்துவிழுந்தது. இந்த பள்ளி தற்காலிக அகதிகள் முகாமாக செயல்பட்டு வந்தது. இங்கு மொத்தம் 400 அகதிகள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இங்குதான் சில மணி நேரங்களுக்கு முன் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இடிபாடுகளுக்கு உள்ளே மக்கள் சிக்கி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலில் எத்தனை பேர் பலியாகி இருப்பார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதுவரை 130 அங்கிருந்து காயங்களுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 270 பேரின் நிலை தெரியவில்லை. காயத்தோடு மீட்கப்பட்ட 130 பேர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதில், எத்தனை பேர் உயிரோடு இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. இங்கு போர் குற்றங்கள் நடைபெற்று உள்ளதாக உக்ரைன் அதிபர் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தார். ரஷ்யா தற்போது உக்ரைன் தாக்குதலில் தனது புதிய வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. கின்சால் எனப்படும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. இதுதான் தற்போது கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. கருங்கடல், அசோவ் கடல், காஸ்பியன் கடல் ஆகிய கடல் பகுதிகளில் இருந்தது ரஷ்யா போர் கப்பல்களை பயன்படுத்தி அதில் இருந்து ஏவுகணைகளை வீசி வருக்கிறது. திடீரென ரஷ்யா ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. அதேபோல் இன்று செர்னிக்கிவ் பகுதியில் ரஷ்யா சார்பாக மருத்துவமனை ஒன்றில் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனை மொத்தமாக நொறுங்கியது. இதுவரை உக்ரைனில் போர் காரணமாக 20 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளனர். தோராயமாக பொதுமக்கள் 910 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் குழந்தைகள் 112 பேர் ப்ளுயாகி உள்ளனர். 2800 பேர் கடுமையாக காயம் அடைந்துள்ளனர். ஆனால் போர் முடிந்த பின்பே உண்மையான பலி எண்ணிக்கை தெரிய வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 304 இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இந்திய இராணுவ வீரர்(india army) ஒருவரை பாகிஸ்தான் இராணுவம் (pakistan army) பிடித்துச் சென்றுள்ளமை மற்றொரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்...