உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள் b11 லெப் கேணல் தர அதிகாரிகள் b12 மேஜர் தர அதிகாரிகள் 13 கப்டன் தர அதிகாரிகள் b14 லெப்ரினன் தரஅதிகாரிகள் b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள் b16 வீர வேங்கைகள் b17 உதவியாழர் b18 கரும்புலிகள் b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

திங்கள், 14 மார்ச், 2022
mother a 173 திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்"
இந்திய ஏவுகணை சம்பவம்: "திருப்பி அடித்திருப்போம், கட்டுப்படுத்திக் கொண்டோம்" - இம்ரான் கான்
சஹர் பலோச்
பிபிசி செய்தியாளர், இஸ்லாமாபாத்
14 மார்ச் 2022
புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியா பாகிஸ்தான் எல்லை
பட மூலாதாரம்,GETTY IMAGES
பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவில் இருந்து பறந்து வந்த ஏவுகணை வடிவிலான பொருள் விழுந்த விவகாரத்தில் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் எதிர்வினையாற்றி இருக்கிறார். ஆனால், பிரதமர் அலுவலகம் மூலமாக இல்லாமல் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர் இந்த ஏவுகணை விவகாரத்தை பேசியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில், ஏவுகணை போன்ற பொருள் விழுந்தவுடனேயே பாகிஸ்தான் விரும்பினால், ஏதாவது செய்திருக்கலாம், ஆனால் நாங்கள் அந்த விஷயத்தை மிகவும் சரியாகக் கையாண்டோம் என்று இம்ரான் கான் கூறினார். பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபிசாபாத் பேரணியில் பேசிய அவர், "பாகிஸ்தானுக்கு பல முனைகளில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. இப்போது இந்தியாவின் ஏவுகணையும் வந்துள்ளது. அந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக எதிர்வினையாற்றியது. நாங்கள் நினைத்தால் வேறு ஏதாவது கூட செய்து இருக்க முடியும். ஆனால், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தோம்" என்றார்.யுக்ரேன் நெருக்கடி பற்றி பேசும்போது இந்தியாவை தொடர்புபடுத்தியும் இதே பேரணியில் இம்ரான் கான் பேசினார்.
"நம் நாடு சரியான பாதையில் செல்கிறது. நமது எல்லையை பாதுகாத்துக் கொள்ளும் எல்லா திறன்களும் நம்மிடம் உள்ளன என்று இன்று நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்," என்று இம்ரான் கூறினார்.
மேலும் அவர், "அடிமை இந்தியாவில் நமது முகமது அலி ஜின்னா சுதந்திர தலைவராக இருந்தார். அவரை நினைத்து முஸ்லிம்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். அவர் யாருக்கும் அடிபணிந்ததில்லை." "இப்போதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து தூதர்களும் ரஷ்யாவுக்கு எதிராக இம்ரான் கான் அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளனர். அது அனைத்து நெறிமுறைகளுக்கும் எதிரானது. முதலில் அப்படிச் செய்ய இந்தியாவுக்கு தைரியம் இருக்கிறதா என்று அவர்களிடம் நான் கேட்டேன்," என்று இம்ரான் காந் தெரிவித்தார்.
விளம்பரம்
இம்ரான் கான்
பட மூலாதாரம்,PPI
"எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் போன்ற வடிவிலானது) "தற்செயலாக" விழுந்த பிறகு, பாகிஸ்தான் "தீர்க்கமாக சிந்தித்து வெளிப்படுத்திய எதிர்வினையை" பாராட்ட இந்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங்கின் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை பாராட்டிய ஒரே இந்தியர் சுஷாந்த் சிங் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அணுசக்தி திறன்களை கருத்தில்கொள்ளும்போது, இந்த 'தற்செயலான ஏவுகணை' சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆனால் இப்படி நடக்கவில்லை. பாகிஸ்தான் அரசுக்கே இதன் பெருமை சாரும் என்று பல இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ராணுவ நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா இதை ஏற்றுக்கொள்ள இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட சூழ்நிலையில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் மார்ச் 9ஆம் தேதி எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அதிவேகமாக பறந்துவந்த பொருள் ஒன்று உள்ளூர் குடியிருப்பு பகுதி மீது விழுந்தது.
பிரமோஸ் ஏவுகணை விற்பனைக்கு பிலிப்பைன்ஸுடன் ஒப்பந்தம் செய்த இந்தியா - பின்னணி என்ன?
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணையின் பலம் என்ன? எங்கெல்லாம் தாக்க முடியும்?
வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்?
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார், மார்ச் 10 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் "மியான் சன்னுவில் விழுந்த அதிவேகப் பொருள் அநேகமாக இந்திய ஏவுகணையாக இருக்கலாம்" என்று கூறினார்.
அடுத்த நாள், மார்ச் 11 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், "வழக்கமான பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது" என்று ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
"ஒரு பெரிய நகரத்தை நோக்கி ஏவுகணை சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?"
ISPR
பட மூலாதாரம்,ISPR
இது குறித்து புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுஷாந்த் சிங் பிபிசியிடம் பேசினார்.
"இந்த ஏவுகணை ஒரு பெரிய நகரத்தை நோக்கிச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுதான் இப்போது விவாதத்தின் மையமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை," என்று குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று சுஷாந்த் கூறினார்.
"அப்படி இருந்தபோதிலும், எல்லைக்கு அப்பாலில் இருந்து வந்த ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதா இல்லையா என்பதை எந்த பாதுகாப்பு அமைப்பும் கணிக்க முடியாது."என்கிறார் அவர்.
"எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்," என்று அவர் குறிப்பிட்டா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு
பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக...

-
உலக நாடுகளில் உள்ள தேசியச் செயல்பாட்டாளர்கல் இணைந்து சீரோ உதவித்திடம் ஊடாக தாயகத்தில் வறுமைகோட்டில் வாழும் மக்களை இனங்கண்டு இவ் உதவி செய்யப...
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு......... தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசிரியர் புத்தகம் LTTE MASTER BOOK தலைமைப்பீடத்தி...
-
விடுதலைப்புலிகளின் தலைவரை பேச்சுக்கு அழைத்த மகிந்தவிடம் பின்னர் ஏற்பட்ட மனமாற்றம் (VIDEO) தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிடம் காணப்பட்ட ஆய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக