உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 25 ஜனவரி, 2025

a 232 கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம்

 

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம் | Agricultural Researcher From Canada Dies In Jaffna

கனடாவில் (canada)இருந்து யாழ்ப்பாணம் (jaffna)வந்த விவசாய ஆராய்ச்சியாளர் இன்றையதினம்(25) மயங்கி சரிந்து உயிரிழந்த துயர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கனடாவில் வசிப்பவரும் கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்தவருமான பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஜும் தொழில்நுட்பமூடாக கலந்துரையாடியபோது மயங்கி சரிந்தார்

குறித்த விவசாய ஆராய்ச்சியாளர் கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர் கனடா பல்கலைக்கழகத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சியாளராக உள்ளார்.


அந்தவகையில் நேற்று(24) நள்ளிரவு பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜும் தொழில்நுட்பமூடாக ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார். இதன்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தவேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விவசாய ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த துயரம் | Agricultural Researcher From Canada Dies In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 305கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு கனேடியத் தமிழர் பேரவை வாழ்த்து   2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூ...