உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க முடியும். நிர்வாகி
b10 பிரிகேடியர், கேணல் தர அதிகாரிகள்
b11 லெப் கேணல் தர அதிகாரிகள்
b12 மேஜர் தர அதிகாரிகள்
13 கப்டன் தர அதிகாரிகள்
b14 லெப்ரினன் தரஅதிகாரிகள்
b15 2ம் லெப்ரினன் தரஅதிகாரிகள்
b16 வீர வேங்கைகள்
b17 உதவியாழர்
b18 கரும்புலிகள்
b19 தலைவர் படம்
உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க
வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு ஜனாதிபதி அனுரவுக்கு அழைப்பு
இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகள் போன்றே வடமாகாணத்தில் புலம்பெயர் தமிழர்களது முதலீடுகளிற்கு புதிய ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.
வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி அனுர யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு அந்தத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கம் அதன் அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, பிராந்தியத்திற்கான இலக்கு முன்முயற்சிகளை உறுதிசெய்து வருவதாக அனுர மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இலங்கைக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், வடமாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் புதிய சுற்றுலா இடங்களை அரசாங்கம் அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே வல்வெட்டித்துறையிலும் அனுர தனது அமைச்சர்கள் சகிதம் பொதுக்கள் சந்திப்பொன்றில் இன்று ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கறுப்பு ஜனவரியை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பில் (Batticaloa) ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கு அருகில் ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் (30.01.2025) தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வழங்கப்படவுள்ள கொடுப்பனவு தமிழ் ஊடகவியலாளர் மட்டு. ஊடக அமையம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
மட்டக்களப்பில் நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜனவரி! | Black January Journalist Murder
மாலை 5.00 மணிக்கு ஒன்றிணைந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், நினைவுத் தூபியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தீப்பந்தம் ஏற்றி சுமார் ஒருமணித்தியாலம் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
அநுர அரசில் தொடரும் கைதுகள்: பிணையில் சென்ற முன்னாள் முக்கிய அதிகாரி அநுர அரசில் தொடரும் கைதுகள்: பிணையில் சென்ற முன்னாள் முக்கிய அதிகாரி தப்பிய முன்னாள் ஜனாதிபதிகள்: அநுர அரசுக்கு தடையான அரசியலமைப்பு தப்பிய முன்னாள் ஜனாதிபதிகள்: அநுர அரசுக்கு தடையான அரசியலமைப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!
யாழ். விஜயம் சென்ற ஜனாதிபதி அநுர ; பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் பேச்சாளர் கி.டனிசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அன்றைய தினம் இடம்பெறவுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.
இந்தநிலையில் தங்களது பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு அறியப்படுத்தும் நோக்கில் நாளை முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரிய ஜனாதிபதி
அமெரிக்க - தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சியை அதிகரிப்பதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா க்ரூஸ் வகை ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
வடகொரியாவுக்கும் (North Korea), தென்கொரியாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் தென்கொரியாவுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வந்தார்.
இதன் காரணமாக ஜோபைடன் காலத்தில் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) அமெரிக்கா மீது கடுமையான நிலைப்பாட்டில் இருந்துள்ளார்.
ட்ரம்பின் பதவியேற்பு
எவ்வாறாயினும், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்காவில் டொனால் ட்ரம்ப் (Donald Trump) பதவியேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுடனான மோதல் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது.
அத்தோடு, ட்ரம்பிற்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் இற்கும் இடையில் முன்பிருந்தே நல்ல உறவு பேணப்பட்டு வந்துள்ளது.
எனினும், தென்கொரியாவுடன் சேர்ந்து வடகொரியா எல்லையில் அமெரிக்கா போர் பயிற்சியை தொடங்கி உள்ள நிலையில், கிம் ஜாங் உன் ஆத்திரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர் திறன் பயிற்சி
இந்த நிலையில், அமெரிக்காவால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் என்பதால் ராணுவம், ஆயுதம் மற்றும் ஏவுகணை கட்டமைப்புகளை பலப்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக வடகொரியா குரூஸ் வகை ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை தொடர்ந்து கிம் ஜாங் உன், மிகவும் சக்தி வாய்ந்ததாக ராணுவத்தை மாற்ற வேண்டும் என்றும் போர் திறன் பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதன்படி, இந்த செயல் என்பது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்தாலும் அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார் என்பதை காட்டும் வகையில் உள்ளதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற அடிக்கற்கள் நினைவு சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாவும் இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவுகள் சுமந்த அடிக்கற்கள் வணக்க நிகழ்வானது சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் 26.01.2025 ஞாயிறு இன்று உணர்வெழுச்சியுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ்கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசிய மாவீரர் பொதுக்குறியீட்டுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு வரலாற்று நாயகர்களுக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம், சுடர்வணக்கம், செலுத்தப்பட்டது. மக்களால் சுடர் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்ட இசைக்கலைஞர்களால் எழுச்சி வணக்கப் பாடல்களும் இசைக்கப்பட்டன. மலர்வணக்கம் சமவேளையில்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால வரலாற்று நாயகர்களான, விடுதலைப் போராட்டத்தின் முதற் களப்பலியான மாவீரர் லெப்டினன்ட் சங்கர் (சுரேஸ்), தாக்குதல் தளபதி லெப்டினனட் சீலன் (ஆசீர்), வீரவேங்கை ஆனந்த், லெப்டினன்ட் செல்லக்கிளிஅம்மான், கப்டன் லாலா ரஞ்சன், தென்தமிழீழத்தின் மட்டுமண்ணில் முதல் வீரச்சாவடைந்த மாவீரர் லெப்டினன்ட் ராஜா (பரமதேவா), கப்டன் பண்டிதர் (இளங்கோ), கப்டன் றெஜி, மேஜர் அல்பேட், கப்டன் லிங்கம், மன்னார் மாவட்ட தளபதி லெப். கேணல் விக்ரர், மேஜர் கணேஸ், மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் பொன்னம்மான், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு அம்பாறை மாவட்டத் தளபதி லெப் கேணல் குமரப்பா, திருமலை மாவட்டத் தளபதி லெப். கேணல் புலேந்திரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர் லெப். கேணல் சந்தோசம், தமிழீழத் தேசியத்தலைவரின் பெருந்தளபதி கேணல் கிட்டு, மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா போன்றவர்களின் நினைவுகள் சுமந்ததுமான இவ்வெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கணக்கான சுவிஸ், பேர்ண் வாழ் மக்கள் அரங்கம் நிறைந்து கலந்து கொண்டிருந்தமையானது உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் பல நெருக்கடியான சூழல்களையும், சவால்களையும் வென்று நிலைபெறுவதற்கு வேர்களான 18 மாவீர அடிக்கற்கள் நினைவு சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், நாடகம், கவிவணக்கத்துடன், சிறப்புப் பேச்சும் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேந்தலினைத் தொடரந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.