1993 கார்த்திகை 11 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் பூநகரி தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஈரூடக தாக்குதலான தவளைப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையின் போது பலாலி இராணுவ கூட்டுப்படைத் தளத்தினுள் கரும்புலிகள் ஊடுருவி சிங்கள இராணுவத்தை பேரதிர்ச்சிக்குட்படுத்தினார்கள்.

BT Poonakari-palaali

பூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள்

புதிய சரிதம் எழுதி…

இக் கரும்புலித்தாக்குதல் சிங்கள் இராணுவக்கட்டமைப்பில் திடீரென சீர்குலைவை ஏற்ப்படுத்தி அவர்களை நிலைகுலைய செய்து , தடுமாற்றத்துக் குள்ளாக்கியது. பூநகரிச் சமரில் விடுதலைப்புலிகளின் பலத்திற்கும் இராணுவ வெற்றிக்கும் உறுதுணையாய் அமைந்தவர்கள் கரும்புலிகளே…..!

” கரும்புலிகள் ” மூலம் உருவாக்கப்பட்ட இத்தந்திரோபாயம் பூநகரி சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை இலகுவாக்கியது.பூகரி முகாம் தாக்கும்போது பலாலியில்இருந்து விமானம் மற்றும் ஆட்லறிதாக்குதல் வரக்கூடாது என்பதற்காவே இத்தாக்குதலை நடத்த வேண்டியதேவை தலைவருக்கு ஏற்பட்டது, அதற்கு அமைவாக புதிதாகக் கரும்புலிகள் தேர்ந்து

 எடுக்கப்பட்டார்கள்,பூநகரி சண்டை ஆரம்பித்தவுடன் தேர்ந்து எடுக்கப்பட்ட கரும்புலிகள் பலாலி விமான தளத்தில் உள்ளே சென்று விமானங்களையும் தகர்த்து அங்கே இருக்கும் ஆட்ளறிகளையும்தகர்க்கவேண்டும் என்பதே தலைவரின் திட்டமாகயிருந்தது , அது திட்டமிட்டாப்போல்வெற்றியாக நடந்தால் பூனகரிப் படையனருக்கு இவர்களால் உதவ முடியாமல் போகும், அப்படி நடந்தால் பூனகரியைபிடிப்பது எமக்கு இலகுவாகயிருக்கும் என்பதே விடுதலைப் புலிகளின் திட்டமாகயிருந்தது,இந்நடவடிக்கைக்கு மேஜர் தொண்டமான்பொறுப்பாககச் சென்றார்,


BT-Maj-Thondaman

 இவரின் சங்கீதப்பெயர் கந்தையா என்பது ஆகும்

 இதற்கான கட்டளைக் கொமாண்டர் பிரிகேடியர் கடாடி இவரின்சங்கீதப் பெயர் கரிகாகாளன் என்பது ஆகும், இக்கரும்புலிகளிற்குக்கொடுக்கப்பட்ட கடமை, பூனகரிச் சண்டை ஆரம்பித்தவுடன் பலாலி விமான நிலையத்தில் இறங்கி விமானம் மீதும் ஆட்ளறி மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே ஆகும்,

 திட்டமிட்டாப்போல் இவர்கள் 15 பேரும் பயிற்சி வளங்கப்பட்டு  இவர்களிற்கான ஆயுதங்களும் வழங்கப்பட்டது பின்னர் ஆயுதங்கள் தண்ணீர் உள்ளே போகாதவாறு பாரிசல் பண்ணப்பட்டது, அடுத்து இவர்களை அனைவரையும் பிரிகேடியர் கடாபி அவர்கள் ஏற்றிக்கொண்டுபரித்தித்துறைக் கடல்கரையில் விட்டார், இரவு பத்துமணி இவர்கள் 15 பேரும் கடலில் இறங்கி தொடர் கைத்தைப்பிடித்துக்கொண்டு நீந்தத் தொடங்கினார்கள்,

 ஆனால் கடல் அடி கூடுதலாக அடிக்க ஆரம்பித்தது, அதனால் தொடர்கைத்தை வெட்டி ஒரு அணி இரண்டாப்பிரிந்து சென்று கொண்டுயிருந்தது,

கடலில் சென்றுகொண்டு டிருந்த வேளை இரு அணிகளிற்கும் இடைவெளி கனத்துவிட்டது அதனால் இரண்டு அணிகளிற்கும் ஆன தொடர்பு தூண்டிக்கப்பட்டது, அதனால் கடலில்வைத்த ஒரு அணியை ஒரு அணி தேடினதால் இவர்கட்டுகொடுக்கப்பட்ட நேரம் வந்து விட்டது.

 அதனால் முதலில் சென்ற சென்ற அனி தரைக்குச்சென்று பலாலிக்குள் நுளைந்தது ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் இறங்கிவிட்டார்கள், தங்களின் ஆயுதங்களை வெளியே எடுப்பதற்கான மறைவிடத்தை தேடிச்செல்கின்றார்கள், தொடர்ந்து அடுத்த அணியும் தரைக்குவந்துவிட்டது ஆனால் அவர்களும் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லவில்லை இடையில் தான் இறங்கினார்கள்,

ஆனால் இவர்கள் சென்ற இடப்பகுதியில் கடல்கரைபக்கத்தில் பாரிய வேலி போடப்பட்டு இருந்தது அதனால் வேலிக்கு மேலால் ஏறிகுதிக்கும் போது எதிரி கண்டு விட்டான் அதனால் சண்டை தொடங்கிவிட்டது, அவ்விடத்திலே இரு போராளிகள் விரச்சாவு அடைந்தார்கள்,ஏனையவர் உள்ளே சென்று விட்டார்கள், ஆனால் முதல் சென்ற அணியும் இவர்களோடு இணைந்துவிட்டது, இவர்கள் உள்ளே நுளைந்ததை அறிந்த இராணுவம் விமானத்தளம் மற்றும் ஆட்ளறி தளத்தைப்பலப்படுத்திவிட்டது, அதைவிட இராணும்இவர்களையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திக்கொண்டுயிருந்து, இரு பகுதிக்கும் கடும் சண்டை நடந்து


பல இராவத்தினர் கொல்லப்பட்டனர், இது இப்படி இருக்க பூனகரிபடைத்தளம்மீதும் விடுதலைப்புலிகள் சண்டைடையை ஆரம்பித்து அது முன்னேற்றமாக நடந்துகொண்டுயிருந்தது, அதனால் பூனகரிப்படைக்கு உதவுவதா அல்லது தங்களைப்பாதுகாப்பதா? என்ற குழப்பமான நிலைக்கு பலாலி இராணுவம் தள்ளப்பட்டது. இவ் நடவடிக்கையில் 13 கரும்புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள், மூன்று போராளிகள் தடையை உடைத்துக்கொண்டு தப்பிவந்தார்கள்,


பலாலி விமானப்படைத்தளத் தாக்குதல்

இக் கரும்புலித் தாக்குதலில் 13 கரும்புலிகள் தேசப்புயல்களாய் வீசினர்.

கரும்புலி மேஜர் கலையழகன்

கரும்புலி மேஜர் தொண்டமான்

கரும்புலி கப்டன் சிவலோகன்

கரும்புலி கப்டன் கரிகாலன்

கரும்புலி கப்டன் சீராளன்

கரும்புலி கப்டன் செந்தமிழ்நம்பி

கரும்புலி கப்டன் மதிநிலவன்

கரும்புலி கப்டன் ஐயனார்

கரும்புலி லெப் நல்லதம்பி

கரும்புலி லெப் கண்ணன்

கரும்புலி லெப் ஜீவரஞ்சன்

கரும்புலி லெப் செங்கண்ணன்

கரும்புலி லெப் வீரமணி

BT-Lt-VeeramaniBT-Lt-SenkannanBT-Lt-JeevaranjanBT-Lt-KannanBT-Lt-NallathambiBT-Capt-AiyanaarBT-Capt-MathinilavanBT-Capt-SenthamizhnambiBT-Capt-SeeralanBT-Capt-KarikaalanBT-Capt-SivaloganBT-Maj-ThondamanBT-Maj-Kalaiyalagan

11/11/1993 இப்படியான நேரத்தில் தான் இந்த தாக்குதலுக்கு தலைவர் திட்டமிட்டார்.!தவளைப்பாய்ச்சல் ஆதாவது பூனகரிச் சண்டை,