உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

a 302 பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு

 

பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு


பூமியின் கடைசி நாள் எப்போது : வெளியான அதிர்ச்சி தரும் அறிவிப்பு | Japan Predicts Earth S Doom

 பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் நாளை விஞ்ஞானிகள்கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ஜப்பானின் Toho பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் நிபுணர்கள் இணைந்து, பூமியில் அனைத்து உயிர்களும் அழியும் துல்லியமான நாளை கணித்துள்ளனர்.

குறித்த தகவலின்படி, அப்பொகலிப்ஸ் (apocalypse) அல்லது உலக அழிவு, 1,000,002,021-ஆம் ஆண்டு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியில் உயிரினங்கள்

இதன்படி, அடுத்த ஒரு பில்லியன் ஆண்டுகளில், சூரியன் மெதுவாக வெப்பத்தை அதிகரிக்க தொடங்குவதனால் கடல்கள் கொதித்து நீராவியாகி விண்வெளிக்கு சிதறும்.

குறித்த நிலை, 999,999,996-ஆம் ஆண்டில் தொடங்கும் என்றும், பூமியில் உயிரினங்கள் வாழ முடியாத நிலை உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.


அதே நேரத்தில், நாசா ஆய்வாளர்கள் சூரிய புயல்களின் உடனடி அபாயத்தையும் எச்சரித்துள்ளனர்.

2024 இல் வெளியான ஆய்வில், சூரியனில் இருந்து வெளியேறும் சக்திவாய்ந்த வெப்பக் கதிர்வீச்சுகள் மற்றும் CME வெளியேற்றங்கள் (Coronal Mass Ejections), பூமியின் வாயுவில் மாற்றங்களை ஏற்படுத்தி, வெப்பநிலை உயர்வுக்கும் ஆக்சிஜன் குறைவுக்கும் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 306 இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை

  இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு கனடாவில் இடமில்லை  என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick B...