காசாவில் தாக்குதல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் மரணம்

காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, காசாவில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ட்ரம்பை சந்திக்கவுள்ள நெதன்யாகு
உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் எனவும் 12 பெண்கள் பேர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக