உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 5 ஏப்ரல், 2025

A 293 அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,?

 

அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,?

மோடியை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் | Modi Met Sri Lanka Tamil Political Representatives

 பொத்து இருந்து பார்ப்போம்,மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் , “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

தமிழ் சமூகத்திற்கு நீதி

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான  இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.


அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

a 292 தொடரும் இனப்படுகொலை

 தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?



தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலைபூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa Prison)  தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று (04.04.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் சிவாநந்தன் என்ற 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம்

உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை | Tamil Prisoner Murdered In Boossa Prison

அத்துடன், உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 3 ஏப்ரல், 2025

a 291 கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

 

கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது


கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நிலக்சி ரகுதாஸ் என்பவரே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராவார்.

2018 முதல் ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்ட சோலஸ் ரோடில் உள்ள வீட்டில் மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் யாழ்ப்பாண யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது | Jaffna Woman Shot Dead In Canada Two Arrested

இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், இந்த தாக்குதலில் 20 வயது நிலக்சி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார்.

மற்றொரு 26 வயது ஆணுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.மேலும், ஒரு நாய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் 28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

புதன், 2 ஏப்ரல், 2025

a 290 ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்

   

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும் | Healthy Foods To Avoid With Banana Side Effect

வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது, மேலும் இது எளிதில் ஜீரணமாகும். இருப்பினும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சில உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் காரணமாக, வயிற்று வாயு, அமிலத்தன்மை, ஒவ்வாமை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வாழைப்பழத்துடன் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வாழைப்பழத்துடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால்நாம் பெரும்பாலும் வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாகச் சாப்பிடுவோம்.இது உடலில் நச்சுக்களை உருவாக்கி, இருமல், ஒவ்வாமை மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் . எனவே, இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 
தயிர்தயிர் மற்றும் வாழைப்பழம் இரண்டும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளன.எனவே, அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தி, சளியை அதிகரிக்கும். இது சளி மற்றும் தொண்டை புண்ணையும் ஊக்குவிக்கிறது.
தர்பூசணிதர்பூசணியில் நிறைய தண்ணீர் உள்ளது, அதே நேரத்தில் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உள்ளது.இரண்டின் கலவையும் செரிமான அமைப்பில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, வாயு, கனத்தன்மை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் .
உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழங்கள் இரண்டிலும் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது.அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, இது வாயு, வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இறைச்சி மற்றும் மீன்இறைச்சி அல்லது மீன் போன்ற அதிக புரத உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் கனத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

வாழைப்பழத்தை எதனுடன் சாப்பிடலாம்

வாழைப்பழத்தை தனியாக சாப்பிடுங்கள் அல்லது ஓட்ஸ், வால்நட்ஸ் அல்லது பிற பழங்கள் போன்ற லேசான சிற்றுண்டிகளுடன் சாப்பிடலாம்.

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும் | Healthy Foods To Avoid With Banana Side Effect

வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே கனமான உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நீங்கள் வாழைப்பழத்தை பால் அல்லது தயிருடன் சாப்பிட விரும்பினால், அதை ஸ்மூத்தி வடிவில் சீரான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  •  
  •  
  •  

A 293 அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,?

  அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,...