இலங்கையில் அதிகரிக்கும் தனிநபர் ஆயுத வண்முறை இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்?
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலிகொழும்புகொட்டாஞ்சேனை பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த துப்பாக்கிட்டு சம்பவத்தில் சசிக்குமார் என்பரே இன்று சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய உந்துருளி சாரதியுடன் டி-56 துப்பாக்கியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளியில் வந்த சந்தேக நபர் இருவரை கிரேன்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக