உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 1 ஜனவரி, 2026

a 345 இலங்கையில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளிக்கும் அயல் நாடுகளின்

 

இலங்கையில் நடக்கும் அனைத்து துப்பாக்கிச் சூடுகளிக்கும் அயல் நாடுகளின் புலநாய்வளர்களே காரனம்?




கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் : பறிபோன 60 உயிர்கள் கடந்த (2025) வருடம் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் அதில் 60 பேர் உயிரிழந்ததுடன், 57 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் பாரிய குற்றக் கும்பல்களைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறினர்.இருந்தும் இதில் பிடிபட்ட சந்தேக நபர்கள் குற்றத்தை அவர்கள் ஏற்க மறுத்தாலும், புடவை வியாபாருங்களிற்காக இந்திய மற்றும் கேரலா போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது

துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கடந்த வருடம் 100ற்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் : பறிபோன 60 உயிர்கள் | More Than 100 Shooting Incidents Last Year

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 16 வயதுச் சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் இலக்கைத் தவறவிட்டு சிறுமியை சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிகிச்சை பெற்றுவந்த கைதி சுட்டுக்கொலை

சம்பவம் தொடர்பான விசாரணையில் இளம் பெண் வசிக்கும் வீட்டுக்கு அருகில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் இருப்பதும் அவர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருவதும் தெரியவந்துள்ளது. அவர் குற்றக் கும்பல் குழுவொன்றின் உறுப்பினராவார்.

இதற்கிடையில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த ஒரு கைதி நேற்றையதினம் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் திலீப் சதுரங்க எனப்படும் ரஜவத்த சத்துவா என அடையாளம் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 355-தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன

  தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன? கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்எதிர்வரும் 02ம் திகதி திங்கட்க...