உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

சனி, 11 அக்டோபர், 2025

a 337பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி

பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி



றியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

29.09.2025 அன்று தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறிய சிதறிய சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி | One Killed In Bomb Explosion In Dilapidated House

இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி இப் பகுதியில் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார் 8 முதல் 22 வயதி இவ்வாறு து. எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக வி...