உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

புதன், 29 அக்டோபர், 2025

a 339 ஸ்கொட்லாந்திற்கு நன்றிதெரிவித்த தமிழர்கள்

 

ஸ்கொட்லாந்திற்கு நன்றிதெரிவித்த தமிழர்கள்



ஸ்கொட்லாந்த் நாடாளுமன்றம் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டஇனப்படுகொலைக்கு வழங்கிய அதிகாரபூர்வ நீதியும் ஆதரவும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது இனப்படுகொலைதான் என்பதையும், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை ஆதரிப்பதாகவும் ( அதாவது தமிழர்கள் விரும்பினால் ஐ.நா வாக்கெடுப்பின் ஊடாக தமிழீழத்தை உருவாக்க ஆதரவு) ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்.

தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அதிகாரபூர்வ இணைப்பு முதல் விமர்சன பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

“ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்டபடி, குறிப்பாக மே 2009 இல் நடந்த ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின் போது, ​​70,000 முதல் 146,000 வரையிலான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்ட, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பாரிய அட்டூழியங்களை நாடாளுமன்றம் அங்கீகரிக்கிறது;

2011 இல் இலங்கையில் பொறுப்புக்கூறல் குறித்த ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, 2015 இல் இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் (OISL) மற்றும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான முறையான துன்புறுத்தல் ஆகியவற்றின் நம்பகமான குற்றச்சாட்டுகளை எடுத்துக்காட்டும் தொடர்ச்சியான ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானங்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புகளை ஒப்புக்கொள்கிறது;

இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தவும், பொது வாக்கெடுப்பு மூலம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை அங்கீகரிக்கவும் தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் சிவில் சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுப்பதைக் குறிப்பிடுகிறது, மேலும் சர்வதேச சட்ட தரநிலைகள் மற்றும் மோதலுக்குப் பிந்தைய சூழல்களில் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரிக்கும் கடந்த கால ஐ.நா. தீர்மானங்களுக்கு இணங்க, இலங்கையின் வடகிழக்கில் தமிழர் சுயநிர்ணய உரிமை குறித்து ஐ.நா.வின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐக்கிய நாடுகள் சபையில் வாதிட இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.

ஆதரவு தெரிவித்தவர்கள்: கரேன் ஆடம், கிளேர் ஆடம்சன், ஸ்டெஃபனி கல்லகன், பாப் டோரிஸ், கோர்டன் மெக்டொனால்ட், ஃபுல்டன் மெக்ரிகோர், ஸ்டூவர்ட் மெக்மில்லன், கரோல் மோச்சன், கெவின் ஸ்டீவர்ட், மெர்சிடிஸ் வில்லல்பா

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

a 338 யாழ். கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் ;

 தீவிர விசாரணையில் பொலிஸார்

எனினும் இவ்வாறு உயிரிழந்த பெண்ணின் விபரம் இதுவரை வெளியாகவில்லை இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



சனி, 11 அக்டோபர், 2025

a 337பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி

பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி



றியதில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

29.09.2025 அன்று தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருவர், வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது குண்டு திடீரென வெடித்துச் சிதறிய சிதறிய சம்பவம் இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பாழடைந்த வீடொன்றில் குண்டு வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலி | One Killed In Bomb Explosion In Dilapidated House

இதில் அங்கங்கள் சிதைந்து படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்திருந்தனர்.

இந்நிலையில் 50 வயதுடைய சோமசுந்தரம் கேதீஸ்வரன் என்னும் குடும்பஸ்தரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து தட்டுவான் கொட்டி பகுதி முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி இப் பகுதியில் வெடிக்காத நிலையில் பல வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


ஞாயிறு, 5 அக்டோபர், 2025

a 336 போராட்டத்தை திசை திருப்ப நினைக்கும் அரசு வவுனியா மாவட்டத் தலைவி கட்டனம்?

செம்மணியில் மீட்கப்பட்ட மனித என்பு கூட்டுத்தொகுதிகளை சர்வதேச நிபுணர்கள் மூலம் மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி தங்களுக்கான நீதி கண்டறியப்பட வேண்டும்


 என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்றைய (05-10-2025) தினம் கிளிநொச்சியில் நடைபெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து கானாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிரா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்

தொடர்ந்து குறிப்பிடுகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளுக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தாங்கள் இலங்கையில் கடந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம்.

அந்த அடிப்படையிலேயே உள்நாட்டு பொறி முறை ஒன்றை எதிர்த்து சர்வதேச தரத்திலான ஒரு பொறி முறை ஊடாகவே தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம் அதே நேரம் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கின்ற போராட்டத்திணை தாம் முற்றாக நிராகரிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

a 340 ஈரவிழிகள் நனைய.

  ஈரவிழிகள் நனைய. மாவீரர்கள் உமைக் காண கல்லறை நோக்கி வருகின்றோம்.. காந்தள் மலர்கள் கரமேந்தி கண்ணீர் துளிகள் கரைமீறி தேச மாந்தர் உமைக் காண தே...