உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 15 மே, 2025

a 308 தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

 தமிழீழ விடுதலை போராட்டத்தில் பன்முகத்தன்மையுடைய மாபெரும் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

breaking

தமிழீழ விடுதலையின் மாபெரும் படைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்.

கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்

ஜோசப் அன்ரனிதாஸ் 

08.04.1964 - 15.05.2009 

திருகோணமலை 


தளபதி சொர்ணம் அண்ணா ! இந்தப் பெயரிலே எத்தனை மிடுக்கு 


உலகம் போற்றும் எம் பெருந்தலைவனைப் பாதுகாக்கும் பணியையும் பொறுப்பையும் திறன்பட ஏற்று சிறப்புடன் கடமையாற்றி கொண்டிருந்த பெரும் ஆளுமை மிக்க ஒரு தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்கள். அவரின் தோற்றமும் அவருக்கே உரித்தான அந்த நடையும்  பலரையும் கவர்ந்தன. இவரது குரல் கேட்கும் படைகள் களத்தில் அஞ்சிக் கதிகலங்கும்.


வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக இருந்த கேணல் சங்கர் அவர்களின் வீரச்சாவிற்குப் பிறகு வான்புலித் தலைமையில் ஒரு பெரும் வெற்றிடம் உருவானது. தமிழீழ வான்படை ஒரு மிகப் பெரும் வளர்ச்சியை  நோக்கிப் பயணித்த காலகட்டம் அது. இந்த வேளை தளபதி கேணல் சங்கர்  அவர்களின் இழப்பு இடியாய் விழுந்தது. 




தமிழீழ வான்படையின் துரித வளர்ச்சியில் எந்தவொரு தொய்வுமில்லாமல் அதனைக் கொண்டு செலுத்த வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது.தேசியத்தலைவரின் ஆலோசனைக்கிணங்க ,கட்டுக்கோப்பாக படையணியைக் கொண்டு செலுத்தக் கூடிய ஒரு தளபதியாக, வான்படை முன்நகர்த்த உகந்தவராகத் தளபதி சொர்ணம் அவர்கள் வான்புலிகளின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்படுகிறார். வான்படையின் பணி காடு சார்ந்த இடங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தமையால், அவரின் காடு சார்ந்த நீண்ட அனுபவம் போராளிகளுக்குப் நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. 




வான்புலிகள்  காட்டில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், விமானங்களைப் பாதுகாத்துக் கடமையைச் சிறப்புடன் ஆற்றி அதைத் தெளிவாக போராளிகளுக்கு கற்றுக் கொடுத்தார். நெருக்கடியான காலகட்டத்தை எப்படிக் கையாள்வது என்பதை அருகில் வைத்து, அதைச் செயல் வடிவாக்கிக் கற்றுக் கொடுத்தோடு, வான்படை சீராகச் செப்பனிட்டார்.

பெருந்தரைச் சண்டைகளை ஒழுங்கமைத்து நாடாத்திய வல்லமை மிக்க தளபதியான அவர்,எதிர் காலத்தில் ஆகாய தரைச் சமர்களை ஒழுங்கமைத்து நடாத்த வான்படை சார்ந்த அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அவருக்கு இருந்து போராளிகளை வழிநடத்தி சீர்பட அதை வளர்த்தெடுத்து ஒப்படைக்கும் பொறுப்பை அவர் ஏற்றிருந்தார். 

பாதுகாப்பு போராளிகளின் மனங்களைத் தொய்வடையாமல் பாதுகாத்துக் கொள்வது இப் பெரும் இயக்கத்தின்  நிர்வாக முறைமை போன்றவற்றைச் செவ்வனக் கற்றுத் தந்தார்.

காட்டை மிகவும் அறிந்தவராக இருந்த தளபதி சொர்ணம் அவர்கள் எமது ஓடு தளத்திற்கான பாதையாக இரணமடுவிற்கு கிழக்காகவும் வட்டக்கச்சியிலிருந்து  பழைய கண்டி வீதிப் பக்கமாகவும் இடத்தினைத் தேர்ந்தெடுத்தார்.இது சண்டை  தொடங்கினால் நகர்விற்கு இலகுவானதாகவும் இருந்தது. ஓடு தளம் அமைக்கும்  பணி நன்றாக நடந்து கொண்டிருந்தது. 

அப்போது தான் துரோகி கருணாவின் பிளவு எற்ப்பட்டது, அத் துரோகச் செயலை முறியடித்து இயக்கத்தை மீட்டுவர கிழக்கிற்கு அனுப்பப்படும் பெரும் பொறுப்பையும் தேசியத் தலைவர் அவர்கள் சொர்ணம் அண்ணாவிடம் வழங்கினார். எங்கெல்லாம் தமிழீழத்

 தேசியத்தலைவர் அவர்கள், நெருக்கடியான சிக்கல்களை முகம் கொடுக்கிறாரோ அங்கெல்லாம் தளபதி சொர்ணம் களமிறங்குவார்.அங்கு 55யின் குரல் முழங்கும்.தடைகள் விலகும் பாதை திறக்கும் அதுதான் சொர்ணம் அண்ணாவின் தனித்திறன்.

தன்னுடன் நின்ற சில போராளிகளை வான்புலியில் விட்டுவிட்டு ஒரு குறிப்பிட்ட போராளிகளுடனே அவர் திருகோணமலை சென்றார்.




தமிழீழ வரலாற்றில் பெரும் கதாநாயகனாகத் திகழ்ந்த, தளபதி சொர்ணம் அவர்களுடன் பயணித்த அனைவரும் பெருமை கொள்ளவேண்டும்.ஏனெனில்,போராளிகளை உறுதியோடு செதுக்கும் சிறந்த சிற்பி.அவரின் பட்டறிவு போராட்டப் பயணத்தின் செல்நெறி.

வாழ்வா சாவா என்று நம்  தேசம் களம் கண்கொண்டிருந்த நாட்களில் தன் மூத்த மகளை தானே கொண்டு போய்  தேசத்திற்காக பெரும் பணியில் இணைத்துவிட்டு, அதே மிடுக்குடன் நடந்த வீரத் தந்தையாவர். அப்பாவும் மகளுமாக ஒரே காலகட்டத்தில் நாட்டுக்காக பணி செய்து,இறுதிவரை வீரத்தோடு களமாடி வரலாற்றைப் பதியம் செய்து, வீர காவியங்களை வடித்த நிலமாக எம் தாய்நிலம் திகழ்கிறது .இப்படிப்பட்ட வீரப் பெரும் தளபதிக்கும் அவரது வீரப்புதல்விக்கும் தமிழீழ மண் தலைவணங்கும்.



தம் குடும்பத்தை விடுத்து, தேசித்தலைவனையும் மண்ணையும் நேசித்து,முன்னேறி வந்த சிறிலங்காப் படைகளைச் சிதறடித்து, கேப்பாப்புலவில் இடியாக இறங்கி படைவிரட்டி வரலாறு படைத்த மாவீரன்.

தமிழீழ விடுதலைப்போராட்டப் பயணத்தில் குறித்துச் சொல்லக்கூடிய, தரையிறக்கச் சண்டைகளில் குடாரப்புவிற்குப் பின் சாளைத் தரையிறக்கமும் முக்கியத்துவம் பெற்ற தரையிறக்கமாகும்.



மிக நெருகடி மிக்க காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளுடன், கட்டளைத் தளபதியாக சாதகமற்ற நிலப்பரப்பில் தரையிறங்கி, எதிரிகளை விரட்ட எடுத்த முயற்சி கைகூடவில்லை.இருந்தும் சிங்களப்படைகளை சிதைத்து விழுப்புண் தாங்கி தளம் திரும்பிய மாபெரும் தளபதியாவார்.இவருடன் கட்டளைத் தளபதிகளாக தரையிறங்கியவர்களில் கட்டளைத்தளபதி லோறன்ஸ் மற்றும் கட்டளைத்தளபதி சாள்ஸ் அன்ரனி ஆகிய இருவரும் உடனிருந்தனர்.முள்ளிவாய்க்கால் வரை தமது இலட்சியப்பாதையில் உறுதியோடு பயணித்து,முள்ளிவாய்க்காலில் படையணிகள் மற்றும் துறைசார் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராகத் தமிழீழத் தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டு.முள்ளிவாய்க்கால் முற்றுகைப் போரிற்கெதிரான முடியடிப்புக் கட்டளைத் தளபதியாக படைநடாத்திய உன்ன தளபதி சொர்ணம் அவர்கள் ,கட்டளை பிறப்பித்தபடியே பிரிகேடியர் சொர்ணமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் வீரவரலாறானார்.இவ்வீரப்பெருந் தளபதிகளையும் போராளிகளையும் நெஞ்சில் நிறுத்தி, நாம் தமிழீழம் என்ற கொள்கைப்பற்றோடு உறுதிதளராது தடைகளைத் தகர்த்து விடுதலை நோக்கிப் பயணிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

a 312 1958 தமிழ் இனவழிப்பின்போது ஒரு சிங்களவர் கூட யாழில் தாக்கப்படவில்லை என்பது வரலாறு !

  1958 தமிழ் இனவழிப்பின்போது ஒரு சிங்களவர் கூட யாழில் தாக்கப்படவில்லை என்பது வரலாறு ! இனப்படுகொலை என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானி...