அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் சிங்கள இராணுவ பெற்றோர்கள் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்பதை வைத்தே அக்காலப் பகுதியில் இருந்தபோராளிகள் சில முடிவுளை எடுத்துள்ளார்கள்,பின்னர் அறிய வரும்போது அது மெய்சிலிர்க்கும். விடயமாகயிருந்தது,
12 ஒக்டோபர் 1986 இல், அடம்பனில் இலங்கை இராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீர மரணம் அடைகிறார். அந்தச் சமரில், விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக, விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள இராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள்.
சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது இராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு, நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது குழறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடைக்கிடையே இடம்பெற்றுக் கொண்டிருந்தன.
யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்குப் பயன்பட்டது.
விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார்.
கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம், கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார்.
"உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார்.
கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது பாராளுமன்றத்தில் இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை.
அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதா கப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார்.
கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்துக் கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே இதனை புலிகள் முதலில் நோக்குகிறார்கள்.
அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களையும் இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் தெரிவிக்கிறார்.
அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்கும் இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள்.
தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார்.
ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள்.
ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு, யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது.
நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்…
பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன.
இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்கத் தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள்.
கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள்.
சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார்.
இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தைச் சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் தாக்குதல் அணிகளோ அமைதி காக்கின்றன.
புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார்.
கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது.
கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார்.
ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார்.
சடலங்களை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள்.
மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தின் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை.
ட்ரக்கை reverse இல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் தாக்குதல் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கிட்டரால் அறிவுறுத்தப்படுகிறது.
இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் ட்ரக்கைப் புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம்.
ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகளும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் திடீரென பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது.
ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி, கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார்.
ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமைச் சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்கள் இரண்டும், போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது.
கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முன்வந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார்.
வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பைச் சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் மிடுக்காக பதிலளிக்கிறார்.
வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்ள ஆரம்பிக்கிறது.
வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார்.
பின்னர் இராணுவத் தளபதிகளுமனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வந்த ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார்.
முதல் நாளிரவு கோட்டையடியில் நடந்த வரலாற்று சம்பவத்தைப் பற்றியறியாமல் உறங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தாரை, அடுத்த நாள் வெளியான உதயன் பத்திரிகையின், “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” என்ற தலைப்புச் செய்தி நித்திரைப் பாயால் எழுப்புகிறது. விடுதலை புலிகள் போர்க்களத்தில் கடைப்பிடித்த விதிமுறைகளைப் பார்தீர்களா,?
ஆக்கம் _ யூட் பிரகாஷ்
கிட்டு பற்றி தளபதி சொர்ணம் அண்ணை குறிப்பிடும்போது 1986 நடுப்பகுதியில் நாங்கள் கொக்குவில் பகுதியில் இருந்தோம். அப்பொழுது கிட்டு அண்ணை வெளியில் இருந்து முகாமிற்கு வரும் போது எவரும் முகாமில் இருக்கவில்லை. எல்லோரும் வெளியே சென்று விட்டார்கள். ஆனால் அங்கே நிறையே ஆயுதங்கள் இருந்தது. எவரும் பாதுகாப்பிற்கு விடப்படவில்லை.
இதைப் பார்த்ததும் குழப்பம் அடைந்த கிட்டண்ணை தண்ணீர் கூட குடிக்கவில்லை வெளியே சென்றவர்களை பார்த்துக் கொண்டேயிருந்தார். அவர்கள் 3 சைக்கிளில் 6 பேர் வெளியே இருந்து வந்தார்கள். அவர்கள் வந்ததும் அவர்களிற்கு பேசவோ அடிக்கவோ இல்லை வீட்டிற்குள் சென்று கோடாரியை எடுத்துக் கொண்டு மூன்று சைக்கிளையும் கொத்தி துண்டுதுண்டாக ஆக்கினார். அத்தோடு அவரின் கோபம் முடிந்து விட்டது.
அன்றில் இருந்து 24 மணித்தியாலமும் அம் முகாமைப் பாதுகாக்க போராளிகள் காவல் கடமையில் இருப்பார்கள். என தளபதி சொர்ணம் குறிப்பிட்டார்.தளபதி கிட்டு வாயால் சொல்லாமல் செயலால் செய்து காட்டி அவர்களின் மனங்களை மாற்றுவார்.
இது இப்டி இருக்க மூத்த உறுப்பினர் அருணா கைது பரிமாற்றத்தின் போது அவரை எடுத்த கிட்டு அண்ணை "கந்தன் கருணை"ஜெயில் முகாமிற்குப் பொறுப்பாக விட்டார். அங்கே முன்னர் கைது செயப்பட்ட ரெலோ, மற்றும் ஈபி. ஆர். எல்.எப் உறுப்பினர்களும் இருந்தார்கள். அவர்களிற்கு உணவு கொடுப்பதற்கு மூன்று போராளிகளும் வெளிப் பாதுகாப்பிற்கு சில குறிப்பிட்ட போராளிகளும் விடப்பட்டு இருந்தனர்.
,30/03/1987ம் ஆண்டு தளபதி கிட்டு அண்ணை சென்ற வாகனத்திற்கு கைக்குண்டு எறிகின்றார்கள் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் . அதில் கிட்டு அண்ணையின் கால்தூண்டிக்கப்பட்டது. ஆனால் கிட்டு அண்ணை மீதும் தலைவர் மீதும் அதிக பாசம் கொண்டவர் அருணா அண்ணை.
இச்செய்தியை அறிந்து கடுமையான கோபமான மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறினார் அருணா அண்ணை. மிகவும் மனநிலை பாதிக்கப் பட்டவராகச் சென்ற அருணா அண்ணை அவர் சென்ற நேரம் அத் தடுப்பு முகாமில் சுமார் 35 ஈபி. ஆர் .எல் .எப் மற்றும் ரெலோ உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.
இவர் போகும் நேரம்எமது போராளிகள் மூவர் இரவு உணவு அவர்களுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். திடீர் என்று இவர் போனதும் றைவுளை எடுத்து சுடத்தொடங்கினார்; அதில் ஈபி .ஆர் .எல்.எப் 10 ரெலோ 3 உணவு பரிமாறிக் கொண்டிருந்த எமது உறுப்பினர்கள் 3 அச் சம்பவத்தில் மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து உறுப்பினர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
அதில்அருணா அண்ணையின் ஆயுதத்தைப் பறிக்கும் போது எமது உறுப்பினர் ஒருவரும் படுகாயம் அடைந்தார் . இதை அறிந்த தலைவர் உடனே அருணா அண்ணையை விசாரிக்குமாறு கிட்டு அண்ணைக்கு கட்டளை வழங்கினார்.
விசாரணையை மேற்கொண்டபோது அருணா அண்ணை சொன்ன விடயம் அந்நேரம் என்ன நடந்தது என்று எனக்கே தெரியாது என்னை மன்னிக்க முடிந்தால் மன்னிக்கட்டாம் இல்லை எனில் சுட்டுக் கொல்லுமாறு தலைவரிடம் சொல்லுங்கோ..! எனஅருணா சொன்னார். இத்தகவல் கிட்டண்ணையூடாக தலைவருக்கு அனுப்பப்பட்டது.
அவரை வீட்டிற்குச்சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுமாறும்; இல்லை அவர் இயக்கத்தில் இருக்க விரும்பினால் அவர் வீரச்சாவு அடையும்போது அவரை மாவீரர் பட்டியலில் இணைக்கமாட்டேன்! என்பதை அவருக்குச் சொல்லுமாறு தலைவர் கிட்டு அண்ணைக்கு செய்தி அனுப்பினார்.
அச்செய்தி அருணா அண்ணைக்குச் சொல்லப்பட்டது. அச்செய்தியை அறிந்ததும், 1988ம் ஆண்டு யாழில் நின்ற அனைத்துப் பேராளிகளையும் வன்னிக்கு வருமாறு இயக்கம் தெரிவித்த போதும் அருணா அண்ணை மட்டும் அங்கே சென்று தலைவரைப் பார்க்க விரும்பவில்லை. தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் நின்று இந்தியா இராணுவத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
அக்காலத்தில் இந்தியா இராணுவத்தின் சுற்றிவளைப்பின்போது சில குறிப்பிட்ட பொது மக்களோடு அருணா அண்ணையும் இந்தியா இராணுவத்தால் கைது செய்ப்பட்டார் . அவ்வேளை அனைவரையும் முட்டுக்காலில் வைத்தது இந்தியா இராணுவம், திடீரென அருணா அண்ணை எழும்பி முற்றுகையை உடைத்துக் கொண்டு மதிலால்பாய்ந்து ஓடும்போது இந்தியா இராணுவம் சுட்டு அருணா அண்ணை அவ்விடத்திலே கொல்லப்பட்டார்.
அருணா விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய உறுப்பினர் ஆவார். சீலன், ஆனந் இருவரையும் எதிரியிடம் உயிருடன் பிடிபடாமல் இருவரையும் சுட்டு விட்டு அவர்களின் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டுபாதுகாத்தது, மட்டும் அல்லாமல் மட்டு அம்பாறைப் பொறுப்பாளராக இருந்து கணிசமான போராளிகளை கிழக்கு மாகாணத்தில் இணைத்தவர். திருநெல் வேலித்தாக்குதல் உட்பட அனைத்து தாக்குதலிலும் பங்குபற்றிய ஒரு முக்கியதளபதி ஆவார்.
தலைவர் சொன்னது போல் அவரை மாவீரர் பட்டியலில் எடுக்கவும் இல்லை போராளிகள் கூட அவர் தொடர்பாக ஒரு வரலாறுகளையும் எழுத வில்லை. அனைவரும் தலைவரின் கட்டளையைப் பின்பற்றினார்கள்.
அவரின் மனநிலை பாதிக்கப்பட்டமையால் எமதுமூன்று போராளிகள் உட்பட சில சகோதரர்களையும் இழக்க வேண்டியிருந்தது. அமெரிக்காவில் பல தடவை இது நடத்தாலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு தடவை நடந்தாலும் இதற்காக மிகவும் கவலை அடைகின்றோம்.