உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

வியாழன், 19 பிப்ரவரி, 2026

a 359தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பு :உன்மையை துணிந்து சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

கூறப்பட்ட இரகசியம் அம்பலம்இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும்



 

என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி  தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பின் போது கூறியிருந்தார்.

இந்தநிலையில், குறித்த கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டிய விடயம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுமா என்ற கேள்வி பிரித்தானிய துணைப்பிரதமர் சார்பில் விபரிக்கப்பட்டபோது இந்த அரசு புதிய அரசியலமைப்பை கொண்டுவர மாட்டாது என  கஜேந்திரகுமார் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயத்தில் மூடிய அறையில் நடைபெற்ற சந்திப்பில் தற்போதைய அரசு புதிய அரசியலமைப்பை கொண்டு வரமாட்டாது என கஜேந்திரகுமார் கூறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கஜேந்திரகுமார் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தாரா என்பது குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

Share: 
  •  
  •  
  •  

சனி, 14 பிப்ரவரி, 2026

a 358-தனிநபர் கொலைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் தினறும் இலங்கை

 

தனிநபர் கொலைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் தினறும் இலங்கை, வெளிநாட்டு தொழில்நுட்ப உதவவிகளைக் கேட்டபோதும் அனைத்து நாடுகளும் கை விரித்ததாகத் தகவல், நடப்பது என்ன



கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா?தலங்கம, அகுரேகொட, குட்டியாவத்த துணை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வழக்கறிஞர் திரு. புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

பொலிஸ் தகவலின்படி, குறித்த கார் காலி அகலியா பகுதியில் கைவிடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

அப்போது, அந்த வாகனம் தீப்பிடித்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நள்ளிரவில் தீப்பற்றிய கார் ; இரட்டைக் கொலை சம்பவத்தில் குற்றவாளிகளின் சதி வெளிச்சமா? | Colombo Double Murder Suspects Conspiracy Exposed

இந்த இரட்டைக் கொலையில் வெளிநாட்டில் மறைந்து இருப்பதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழுவைச் சேர்ந்த “கரந்தெனிய சுத்தா” என அழைக்கப்படும் ஜெயலத் சில்வா தொடர்புடையவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

முன்னதாக, உயிரிழந்த வழக்கறிஞர் கரந்தெனிய சுத்தாவுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், பின்னர் அவரது முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் “லோகு பாட்டி” என்பவரின் வழக்கிற்காகவும் ஆஜராகியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் தகவல் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தக் கொலை சுத்தாவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையில் கருதப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

a 357-]வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

 

235வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு


சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர், முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினர் இதற்கு அழைப்பு விடுத்தனர்.

ஆதரவளிக்க அழைப்பு

மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகளும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு ஆதரவளிக்க அழைப்பு விடுத்தனர்.

வடக்கில் சுதந்திர தினத்துக்கு எதிராக கரி நாள் பேரணி! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு | Jaffna Uni Students Call Black Day Rally

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சில தினங்களாக அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 30 ஜனவரி, 2026

a 356வாழ்வாதார உதவி என்ற போர்வையில் பெண்களை இலக்கு வைக்கும் வெளிநாட்டு ஆண்கள்

 

வாழ்வாதார உதவி என்ற போர்வையில் பெண்களை இலக்கு வைக்கும் வெளிநாட்டு ஆண்கள்?


கணவன், 2 பிள்ளைகளை விட்டு விட்டு பிரான்ஸ் குடும்பஸ்தருடன் கம்பி நீட்டி கிளிநொச்சி மாதங்கி!!

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்தில் பல கலாசார சீரழிவுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியது.
இள வயது திருமணங்கள், பல தார திருமணங்கள், பதின்ம வயது திருமணங்கள் மற்றும் பதின்ம வயது கர்ப்பம் காரணமாக வட மாகாணத்தின் கல்வித் தரம் குறைவடைகின்றது.

இது ஒருபுறம் இருக்க, புலம்பெயர் தேசங்களில் இருந்து உதவி வழங்கும் போர்வையில் வருபவர்களும், இங்குள்ள குடும்பப் பெண்களின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது என்னவோ ஏதுமறியாத குழந்தைகள்தான்.

புகைப்படத்தில் உள்ள ரங்கா என்று அழைக்கப்படும் தனுராஜ் மதுரங்கி 1994 ஆம் ஆண்டு பிறந்தவர். திருமணம் முடித்து,11 வயது ஆண் பிள்ளை மற்றும் 6 வயது பெண் பிள்ளை என இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனுடன் கிளிநொச்சியில் வாழ்ந்தவர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்கு வைத்து புலம்பெயர் நாடான பிரான்ஸில் இருந்து கிடைக்கும் நிதி உதவிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டபோது,தொலைபேசியில் சசி என்பவருடன் மலந்த காதல் (காமம்)மாகமாறி இரவு பகலாக போண் கதை தனது அந்தரங்கப்பபதியை ஆணிடம் காட்டி அவரை வசியப்படுத்தியுள்ளார், இன்று கணவரும் குழந்தைகளும் நிர்க்கதியான நிலையில் தவிக்கிறார்கள்.

ஆனால் ரங்காவோ (மதுரங்கியோ) இரண்டு குழந்தைகளையும் கணவரையும் உதறித் தள்ளிவிட்டு, சட்டரீதியான விவாகரத்து ஏதுமின்றி, வெளிநாட்டு முகவர் ஊடாக சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி, பிரான்ஸ் சென்றடைந்துள்ளார்.அதுமாத்திரம் அல்லாமல், அங்கு ஏற்கனவே திருமணமான சசியுடன் சட்டவிரோதமாக குடும்பம் நடத்திவருவதுடன், ஒரு குழந்தைக்கும் தாயார் ஆகியுள்ளார்.

கணவன் மற்றும் பிள்ளைகளுடன் கிளிநொச்சியில் வாழும்போது, கணவரை அருகில் வைத்துக் கொண்டு, பிரான்ஸ் சசியுடன் இரவிரவாக தொலைபேசியில் காதல் லீலைகளை புரிந்தார்.அதனால் கணவன் – மனைவிக்கு இடையில் அடிக்கடி பிரசரசினைகள் எழுந்தன. ஆனால் ரங்காவோ வாய் கூசாமல் கணவன் எயிட்ஸ் நோயாளி என கதை கட்டியதுடன், தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸிலும் முறைப்பாடு செய்தார்.

பிரான்ஸ் காதல் (காமம்) தொடர்புக்கு கிளிநொச்சியில் அரசியல் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளரும் உதவியாம். அவரின் மகன் பி்ரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கான தொழில் வாய்ப்பை பிரான்ஸ் சசி வழங்கியதற்கான கைமாறாம் இது.இறுதியில் கணவன் – பிள்ளைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு, பறந்துவிட்டார் ரங்கா இப்படியான கதை தமிமீழப் பகுதியில் ஆயிரத்திற்கு மேல் உள்ளது ஆகவே அனைவரும் விளிப்பாகயிருக்கவும்(
யாரை யார் நம்புவது?

வியாழன், 29 ஜனவரி, 2026

a 355-தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன

 

தமிழர் நிலத்தை விழுங்கும் சிங்களப் பூதங்கள் நடப்பது என்ன?


கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இன்று தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கும் நோக்குடனும், எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இத்திட்டம் அமையவுள்ளது.

பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணை

அத்தோடு வனவளத்திணைக்களமே குறித்த பிரதேசத்தினுடைய பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கும் நாம் எதிர்ப்பு தெரிவிப்பதோடு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் | Massive Protest Against The Kivul Oya Project

திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

அதன் அடிப்படையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை வரும் 02ம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளோம்.

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் | Massive Protest Against The Kivul Oya Project

எனவே எமது எதிர்காலத்தினை சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் அனைவரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்

திங்கள், 26 ஜனவரி, 2026

a 354அநுரவின் அமைச்சர்களுக்கு புகழாரம்! சரத்

 

அநுரவின் அமைச்சர்களுக்கு புகழாரம்! சரத் பொன்சேகா வெளிப்படை


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசில் உள்ள அமைச்சர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்ல என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்புகள்

அதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் தமிழர்களின் வீடத்தில் கட்டாய சிங்களப் பாடத்தைக்கொண்டுவந்து அவர்களின் தமிழீழக்கனவை முற்றராக அழிப்பதற்கு சிறந்த முறையில் தூர நோக்கத்தோடு செயல்படுகின்றார் , அதற்கும் எமது வாழ்த்துக்கள் அடுத்து முஸ்லிங்கள் ஒரு பிள்ளைக்கு மேல் பெறக் கூடாது என்ற கட்டாயத்தையும் சிங்கள கட்டாயப் பாடம் போன்று அவர் கொண்டு வர வேண்டும் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” என்றார்.

சனி, 24 ஜனவரி, 2026

a 353 கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


 கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.




கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ-35 பரந்தன் – முல்லை வீதியில் முதலாம் மைல் பகுதியில் நேற்று (24-01-2026) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கருப்பையா ராஜகுமாரன் என்பவரே விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த பாரவூர்தி விசுவமடு பகுதியிலிருந்து வருகை தந்த முச்சக்கர வண்டியுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் கோர விபத்தில் சிக்கி யாழ் குடும்பஸ்தர் பலி: இருவர் வைத்தியசாலையில்...! | Kilinochchi Accident Family Man Dies On A 35

இந்த நிலையில், விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

a 359தமிழ் தலைவர்கள் பிரித்தானிய தூதரகத்தின் மூடிய அறைக்குள் நடத்திய சந்திப்பு :உன்மையை துணிந்து சொன்ன கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  கூறப்பட்ட இரகசியம் அம்பலம்இன நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்டும் விடயங்களில் தமிழர்களுடன் பிரித்தானியா எப்போதும் துணை நிற்கும்   என பி...