உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

உலக வாழ் அனைத்து மக்களையும் வரவேற்கின்றோம் நீங்கள் விரும்பும் மொழிகளில் Translate ஊடாக மாற்றி படிக்க

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

a 295 பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்

 

பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று (8) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையான் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்து இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுக்கான காரணங்கள்

கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் | Pillaiyan S Arrest Sparks Firecrackers In Batti

எவ்வாறாயினும், கைதுக்கான காரணங்கள் ஏதும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

a 294 காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர்

 

காசாவில் தாக்குதல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் மரணம்

காசாவில் தாக்குதல்: பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் மரணம் | Israel Attack In Gaza

காசாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, காசாவில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றது.

கான் யூனிஸ் பகுதியில் நடந்த தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பை சந்திக்கவுள்ள நெதன்யாகு

உயிரிழந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் எனவும் 12 பெண்கள் பேர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து வர்த்தக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ள நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Share: 
  •  
  •  
  •  

சனி, 5 ஏப்ரல், 2025

A 293 அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,?

 

அப்படி சொல்வதற்கு மோடி நிப்பந்திக்கப்பட்டாரா அல்லது மாறிச்சொன்னால் ராஜீவ் காந்திக்கு நடந்த அடிதான் தனக்கும் நடக்கும் என பயத்தில் சொன்னாரா,?

மோடியை சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள் | Modi Met Sri Lanka Tamil Political Representatives

 பொத்து இருந்து பார்ப்போம்,மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (x) கணக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் , “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.

தமிழ் சமூகத்திற்கு நீதி

பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான  இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.


அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

a 292 தொடரும் இனப்படுகொலை

 தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?



தொடரும் இனப்படுகொலை கண்டுகொள்ளாத உலகம்?தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலைபூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் (Boossa Prison)  தமிழ்க் கைதியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று (04.04.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நந்தகுமார் சிவாநந்தன் என்ற 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவம்

உயிரிழந்த கைதியின் உடலில் சுமார் 11 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை | Tamil Prisoner Murdered In Boossa Prison

அத்துடன், உயிரிழந்த கைதியோடு அதே அறையிலிருந்த வேறு சில கைதிகள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த கைதியின் சடலம் காலி தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

வியாழன், 3 ஏப்ரல், 2025

a 291 கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

 

கனடாவில் தமிழீழம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது


கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் யாழ்ப்பாண யுவதி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நிலக்சி ரகுதாஸ் என்பவரே இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவராவார்.

2018 முதல் ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்ட சோலஸ் ரோடில் உள்ள வீட்டில் மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடாவில் யாழ்ப்பாண யுவதி சுட்டுக்கொலை சம்பவம் தொடர்பில் இருவர் கைது | Jaffna Woman Shot Dead In Canada Two Arrested

இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 இருவரும் அவசர மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும், இந்த தாக்குதலில் 20 வயது நிலக்சி ராகுதாஸ் (மார்க்ஹாம்) உயிரிழந்தார்.

மற்றொரு 26 வயது ஆணுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.மேலும், ஒரு நாய் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் 28 வயது ஏக்வான் முர்ரே என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

புதன், 2 ஏப்ரல், 2025

a 290 ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்

   

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும்

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும் | Healthy Foods To Avoid With Banana Side Effect

வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான பழமாகக் கருதப்படுகிறது, மேலும் இது எளிதில் ஜீரணமாகும். இருப்பினும், சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சில உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது என ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் காரணமாக, வயிற்று வாயு, அமிலத்தன்மை, ஒவ்வாமை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே வாழைப்பழத்துடன் எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


வாழைப்பழத்துடன் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால்நாம் பெரும்பாலும் வாழைப்பழத்தையும் பாலையும் ஒன்றாகச் சாப்பிடுவோம்.இது உடலில் நச்சுக்களை உருவாக்கி, இருமல், ஒவ்வாமை மற்றும் தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் . எனவே, இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 
தயிர்தயிர் மற்றும் வாழைப்பழம் இரண்டும் குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளன.எனவே, அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தி, சளியை அதிகரிக்கும். இது சளி மற்றும் தொண்டை புண்ணையும் ஊக்குவிக்கிறது.
தர்பூசணிதர்பூசணியில் நிறைய தண்ணீர் உள்ளது, அதே நேரத்தில் வாழைப்பழத்தில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உள்ளது.இரண்டின் கலவையும் செரிமான அமைப்பில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, வாயு, கனத்தன்மை மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் .
உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழங்கள் இரண்டிலும் அதிக அளவு ஸ்டார்ச் உள்ளது.அவற்றை ஒன்றாகச் சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்குகிறது, இது வாயு, வீக்கம் மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இறைச்சி மற்றும் மீன்இறைச்சி அல்லது மீன் போன்ற அதிக புரத உணவுகளுடன் வாழைப்பழத்தை சாப்பிடுவது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது வயிற்றில் கனத்தையும் சோம்பலையும் ஏற்படுத்தும்.

வாழைப்பழத்தை எதனுடன் சாப்பிடலாம்

வாழைப்பழத்தை தனியாக சாப்பிடுங்கள் அல்லது ஓட்ஸ், வால்நட்ஸ் அல்லது பிற பழங்கள் போன்ற லேசான சிற்றுண்டிகளுடன் சாப்பிடலாம்.

ஒருபோதும் இந்த உணவுகளை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்: இந்த நோய்கள் வரும் | Healthy Foods To Avoid With Banana Side Effect

வாழைப்பழம் சாப்பிட்ட உடனேயே கனமான உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நீங்கள் வாழைப்பழத்தை பால் அல்லது தயிருடன் சாப்பிட விரும்பினால், அதை ஸ்மூத்தி வடிவில் சீரான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

  •  
  •  
  •  

வெள்ளி, 28 மார்ச், 2025

a 289 தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு (Tamil Eelam of story)

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு (Tamil Eelam of story)

பாகம் இரண்டின் ஐந்தாவது தொடர்

ஆரம்ப காலத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தில் தளபதி பரமதேவா தலைமையிலே தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக நடந்து கொண்டியிருந்தது, ஆனால் இந்தியாவில் பயிற்சி எடுப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டதும் இந்தியாவில் பயிற்சி எடுக்கும் முதலாவது அணியில் தளபதி பரமதேவாவின் பேரையும் இணைத்த தேசியத் தலைவர் அவருடன் யோகன் பாதர் போராளி காந்தன் என சில குறிப்பிட்ட போராளிகளின் பேர் விபரம் அடங்கியப ட்டியலை தளபதி பரமதேவாவிற்கு அனுப்பி இருந்தார்,


தகவல் தனக்குக் கிடைத்ததும் அவர் மட்டு, அம்பாறை இணைப்பாளராக போராளி ராம் என்பவரையும் அவருக்கு உதவியாக கப்டன் பிறான்சிஸ் அவர்களையும் தான் வரும் வரைக்கும் மாவட்டத்தின் அனைத்து வேலைகளையும் செய்யுமாறு சொல்லிவிட்டு உடனே தன்னோடு பயிற்சி எடுக்கும் போராளிகளைக் கூட்டிக்கொண்டு முதலில் யாழ்பாணம் சென்றார், அடுத்து அங்கு இருந்து படகு மூலம் இந்தியா சென்றார்,அங்கே சென்ற அவர் திறமையாகப் பயிற்சி எடுத்தது மட்டுமின்றி தேசியத் தலைவரின் நல் மதிப்பையும் பெற்றுயிருந்தார், பயிற்சி நிறைவு அடைந்ததும். அவர் மீண்டும் தேசியத் தலைவரால் தமிழகம் இருந்து போராளிகளோடு வடமாகாணம் அனுப்பப்பட்டார்.

இதே காலப்பகுதியில்தான் மூத்தபோராளி காந்தன் அவர்களும் இந்தியாவில் முதலாவது பயிற்சிமுடித்து யாழ்ப்பாணம் வந்து கிட்டு அவர்களின் அலுவலகத்தில் நின்றார் ஆனால் இவர்களை மட்டக்ளப்புக்கு எப்படி அனுப்பலாம் என கிட்டு அண்ணை திட்டம் போட்டுக்கொண்டிருந்தார், ஆனால் காந்தனிடம் சிறிலங்கா தேசிய அடையாள அட்டை இருந்தது பரமதேவாவிடம் அடையாள அட்டை இல்லை, அதனால் காந்தன் மட்டும் இலங்கை போக்குவரத்துக்கழக பேருந்தில் மட்டக்களப்பு அனுப்பப்பட்டார்

ஆனால் பரமதேவா மட்டக்களப்பு செல்வதற்காக வன்னிக் குறுப்போடு இணைக்கப்பட்டார். அப்பொழுது அவர் மணலாறு போய் நின்ற காலத்தில்தான் 05/08/1984 அன்றுமுல்லை ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.முல்லை மண்ணில் ஓட்டுச்சுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் பரமதேவா பங்குபற்றி சிறந்த வீரனாகச் செயற்பட்டார்.

லெப்.பரமதேவா மட்டக்களப்பு மாவட்டதிற்கு  தலைவரால் அனுப்பப்பட்டார்.05/08/1984அன்று மாலை ஐம்பது பேரைக்கொண்ட முல்லைத் தீவுமாவட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் “கொரில்லா” அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.. ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள்

பரமதேவும் சண்டை முடிந்த கையோடு நடையில் மிகவேகமாகப்போய்ச்சேர்ந்தார், மட்டக்களப்பிற்கு அங்கே சென்று என்ன செய்தார் என்பதை பிறகு பார்ப்போம்

1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடந்த சிறு..சிறு தாக்குதல்களைப் பற்றிப் பார்ப்போம்

04/08/1984/ அன்று பதினெட்டு சிங்களப் படையினர் வல்வெட்டித்துறையில் வைத்து விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்தனர். அம்முற்றுகையை பொது மக்களின் ஆதரவுடன் இரு பகுதிக்கும் இடையே நடந்த சண்டையில் ஆறு கடற் படையினர் கொல்லப்பட்டனர். மூவர் காயம் அடைந்தனர். இழப்புக்கள் இன்றி முற்றுகையை உடைத்து விடுதலைப் புலிகள் வெளி ஏறினார்கள்.


05/08/1984 அன்று முல்லை ஒட்டி சுட்டான் பொலிஸ் நிலைய தாக்குதலில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. முல்லை மண்ணில் ஓட்டிசுட்டான் ஊரில் நிலைகொண்டிருந்த சிங்கள காவல் நிலையத்தைத் தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் பரமதேவா பங்குபற்றி சிறந்த வீரனாகச் செயற்பட்டார். லெப்.பரமதேவா மட்டக்களப்பு மாவட்டதிற்கு  தலைவரால் அனுப்பப்பட்டார், அப்பொழுது மட்டுநகரை நோக்கிப் பயனித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு இச்சந்தர்ப்பம் கிடைத்தது. 05/08/1984 அன்று மாலை ஐம்பது பேரைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் “கொரில்லா” அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர்.. ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினார்கள்

1984 நடைபெற்ற சிறு, சிறுநடவடிக்கைகள் பற்றிப் பார்ப்போம்………

09/04/1984 அன்று யாழ் றெயில் நிலையத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வைத்து விடுதலைப்புலிகள் நடாத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இராணுவ வண்டி முற்றாகச் சேதம் அடைந்தது. 10/04/1984 அன்று விடுதலைப் புலிகள் பொது மக்களின் ஆதரவுடன் பருத்தித் துறை பொலிஸ் நிலையத்தைத் தாக்கி எரியூட்டியதுடன் அங்கு இருந்து இராணுவப் புத்தகங்களையும் கைப்பற்றினர்.
04/05/1984 அன்று விடுதலை புலிகளின் முக்கிய தளபதியான சீலனை காட்டிக் கொடுத்தமைக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொன்னையா, சுப்பிரமணியம் என்ற நபருக்கு மீசாலையில் வைத்து விடுதலைப் புலிகள் சாவொறுப்பு வழங்கினார்கள்.

16/05/1984 தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை காட்டிக் கொடுத்த வவுனியாவைச் சேர்ந்த தர்மபாலா என்பவருக்கு சாவொறுப்பு வழங்கப்பட்டது

18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு பாரிய அற்பணிப்பைச் செய்து அனைத்துப் போராளிகளிற்கும் ஒரு வளிகாட்டியாக தனது வீரச்சாவைப்பதிவு செய்தார்,

 இப்போராளி தமிழிழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில் முதலாவது குப்பி கடித்து வீரச்சாவு அடைந்த போராளி இயக்கப் பெயர் வீரவேங்கை  பகீரதன் சொந்தப் பெயர் வேலுப்பிள்ளை அன்னலிங்கம் பகீரதன் மண்டைதீவு, யாழ்ப்பாணம். வீரப்பிறப்பு: 02.05.1959 


 18.05.1984 அன்று யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில் படையினரால் முற்றுகையிடப்பட்டு அவரைக்கைது செய்து அவர்களின் இராணுவ முகாமிற்குக்கொண்டு செல்லப்பட்டபோது அவர்  சயனைட் உட்கொண்டு அவ்விடத்திலே வீரச்சாவு அடைந்தார், அடுத்து அவரின் வித்துடலை உறவினர்களிடமிருந்து வேண்டியெடுத்து விடுதலைப் புலிகள் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைத்துள்ளார்கள், ஆரம்பத்தில் பொன்சிவகுமரன் குப்பி கடித்து தமிழர்களிற்கு வழிகாட்டினாலும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிற்கு வளி காட்டியது இவரே ஆவார் அதைத்தொடர்ந்து ஆயிரக்காணக்கான எமது போராளிகள் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பம் ஏற்படும்போது குப்பிகடித்து வீரச்சாவு அடைந்துள்ளார்கள்,


காரணம் அவர்கள் உயிரோடு பிடிபட்டால் எதிரி கடுமையான சித்திரவதை செய்து எமது போராட்டத்தில் இரகசியம் எனக ருதப்படும் எமது தீவிர ஆதரவாளர்கள் பற்றிய தகவல், மற்றும் எமது தலைவரின் மறைவிடம், ஆயுதக் களஞ்சியங்களின் மறைவிடம், எமது எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான இரகசியங்களை  எதிரி அறிந்த பின் அவரைக் கொலை செய்து விடுவான்,
அதனால்தான் எமது தலைவர் இவ் நடைமுறையை அனைத்து போராளிகளிற்கும் கொண்டு வந்தார்,

ஆயுதப்போராட்டம் மைனிக்கும்வரை இது நடைமுறையில் இருந்தது, 04/08/1984/ அன்று பதினெட்டு சிங்களப் படையினர் வல்வெட்டித்துறையில் வைத்து விடுதலைப் புலிகளைச் சுற்றி வளைத்தனர். அம்முற்றுகையை பொது மக்களின் ஆதரவுடன் இரு பகுதிக்கும் இடையே நடந்த சண்டையில் ஆறு கடற் படையினர் கொல்லப்பட்டனர். மூவர் காயம் அடைந்தனர். இழப்புக்கள் இன்றி முற்றுகையை உடைத்து விடுதலைப் புலிகள் வெளி ஏறினார்கள்.
05/08/1984 அன்று மாலை ஐம்பது பேரைக்கொண்ட முல்லைத்தீவுமாவட்ட ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகளின் “கொரில்லா” அணியினர் நடத்திய தாக்குதலில் எட்டு கொமாண்டோப் பொலிஸார் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்களிடம் இருந்து 4 இயந்திரத் துப்பாக்கிகளும் 38 துப்பாக்கிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.


06/08/1984 அன்று யாழ் மருத்துவமனைக்கு அண்மையில் சிங்களப் படைக்கவச வாகனங்களில் வந்து நின்று பொது மக்களின் கட்டிடங்களை சேதப்படுத்திக்கொண்டு இருந்தவேளை விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிராகக் கைக்குண்டுகளை வீசி நடாத்திய தாக்குதலில் அதிகாரி ஒருவர் அவ் இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு இராணுவத்தினர் காயம் அடைத்தனர்.
11//08/1984 அன்று மன்னார் பூநகரி பிரதான பாதையில் நிலக்கண்ணி வெடிவைத்து விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் வண்டியில்   வந்த  பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஜீப் வண்டியும் முற்றாக அழிக்கப்பட்டதுடன் ஆயுதங்களும் மீட்கப்பட்டன.


14/08/1984 அன்று இராணுவம் மற்றும் பொலிஸ் இணைந்து இருந்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையம் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் பல படையினர் காயம் அடைந்தனர்.
24/08/1984 அன்று கரவெட்டி மேற்கில் பாதையொன்றில் விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியை அகற்ற முயன்ற இராணுவம் மீது அது வெடித்ததில் எட்டு இராணுவத்தினர் அவ் இடத்திலே கொல்லப்பட்டனர்.
01/09/1984/ அன்று செம்மலை ஊடாக செல்லும் முல்லைத்தீவு கொக்குளாய் பாதையூடாக மூன்று வாகனங்களில் இராணுவம் வந்து கொண்டிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட  கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு ஜீப்வண்டி கண்ணிவெடியால் சிதறியது. மற்ற இரண்டு வாகனங்களை நோக்கி விடுதலைப்புலிகள் நடாத்திய தாக்குதலில் மொத்தம் பதினைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


22/09/1984 பரமதேவின் பிரச்சனையைப் பிறகு பார்ப்போம் என குறிப்பிட்டு இருந்தேன் அங்கே சென்ற பரமதேவா அனைத்துப் போராளிகளையும் ஒருங்கிணைத்தார் போராளி காந்தன், காக்கா, பரமதேவா கட்டன் பிரான்சிஸ் என என்னும் பல போராளிகள் மற்றும் ஆதரவாழர்களையும் இணைந்து. கொண்டு 22/09/1984 களுவாஞ்சிக்குடி சிங்களக் காவல் நிலைய தாக்குதலுக்குச் சென்று ஒரு பாரிய தாக்குதலை நடாத்தியுள்ளார். எதிரி முன்ரே தாக்குதலை ஆரம்பித்தமையால்

தாக்குலில் லெப். பரமதேவா, ஆதரவாளர் ரவியும், வீரச்சாவு அடைந்தனர். முன்னரே பொலிஸார் உசார் அடைந்தமையால் விடுதலைப் புலிகள் பாதுகாப்பின் நிமித்தம் பின்வாங்கிச்  சென்றார்கள்.இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதுவொரு படிக்கல்லாகவே அமைந்தது அவரின் வீரச் செயலை அறிந்து ஆயிரக்கணத்கான இளைஞர் யுவதிகள் அவ்மாவட்டத்தில் இருந்து விடுதலைப் போராட்டதில் இணைந்து போராடி வீரச்சாவு அடைந்தார்கள், இதற்கு இவரே வழிகாட்டியென்பதை மறக்க முடியாது

முதலாவது பாசறையில் பயிற்சி எடுத்த பல கிழக்கு மாகாணப் போராளிகள் இருந்தாலும், இச்சண்டையில் திறமையாகச் செயல்பட்ட காரணத்தால் கிழக்கு மாகணத்திற்கு முதல் தாக்குதல் தளபதியாக பரமதேவா தலைவரால் அனுப்பப்பட்டார்.  1984 ம் ஆண்டு யூலை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத் தாக்குதல் தளபதியாக ராஜா என்னும் பெயருடன் பரமதேவா தாய் மண்ணில் கால் பதித்தார். சிங்களப் படைகளுக்கு எதிரான தாக்குதல்களைத்  தீவிரப் படுத்தும்  நோக்கோடு தலைவர் அவர்களினால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தாக்குதல் தளபதிகள் என்ற வகைக்குள் தமிழீழத்தின் தாக்குதல் தளபதியாக கேணல் கிட்டு அவர்கள் யாழில் செயல்பட்டார். அதே போல் கிழக்கு மாகாணத் தாக்குதல் தளபதியாக ராஜா (பரமதேவா) தாய் மண்ணுக்கு வருகை தந்திருந்தபோது தமிழீழப் விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்கள் உட்பட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர்.
பல இயக்கங்களின் உருவாக்கமும், இவற்றில் உள்நுழைந்த தன்னல வாதிகளுக்கு மத்தியில் மக்கள்அவரை நம்பினார்கள்

2/03/1984 பயிற்சியை  முடித்து வந்த பரமதேவாவை கிட்டு அவர்கள் தான் மட்டக்களப்பிற்கு அனுப்பி வைத்தார்.

வெற்றியடையா விட்டாலும்,  மட்டு மாவட்டத்தில் நிலை கொண்டுயிருந்த எதிரி படைகளிற்கு ஒரு சவாலாகவே அமைந்தது. அச்சண்டையில் முதல் வித்தாக வீரவேங்கை ரவியுடன், வீழ்ந்த லெப்.ராஜாவின் வீரச்சாவுடன் புரட்சிகர விடுதலைப் பயணத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டக்களப்பில்  தொடங்கி வைத்தது. தன்னலமற்ற, நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்ட பரமதேவா அவர்களின் இழப்பு தலைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.

மட்டக்களப்பின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள நாவற்கேணி மறைவிடத்தில் பரமதேவா அவர்களும்; ஏனைய போராளிகளும்  தங்கியிருந்தனர். போராட்டப் பயணத்தில் மக்களுக்கு அறிமுகமான பல போராளிகள் இணைந்து இருந்ததனால் மக்களின் ஆதரவு நன்றாகவே இருந்தது. முதல் தாக்குதலுக்கான திட்டம் இங்கிருந்துதான் உருவாக்கப்பட்டது. தலைவரின் ஆணையில் தாக்குதல் தளபதியாக களமிறங்கிய பரமதேவாவுக்கு தலைவரின் ஆலோசனைகளும் நிறைவாகக் கிடைக்கப்பெற்றிருந்தன.

 பரமதேவாவின் வீரச்சாவிற்குப் பின்னர் : 1984/04ம் மாதம் வரை மட்டு, அம்பாறை இணைப்பாளராக போராளி காக்கா தலைவரால் நியமிக்கப் பட்டுயிருந்தார்.பின்னர் அனைத்து செயல்பாடுகளிலும் பங்குபற்றிய பிரான்ஸ்சிக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்

அவரின் கோட்டைக்கல்லாறு விட்டிற்குச் சென்றபோது சமூகவிரதிகளால் இந்திய இராணுவத்திற்கு தகவல் தெரிவித்தமையால் இந்திய இராணுவமும் தேசத்துரோகிகளும் இணைந்து முற்றுகையிட்டபோது, முற்றுகை முறியடித்து ஓடும்போது காலில் போத்தல் துண்டு வெட்டி இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது அதை பின் தொடர்ந்து சென்ற இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவ்விடத்திலே கப்டன் பிரான்சிஸ் வீரச்சாவு அடைந்தார், மேற்படி பொறுப்பாகயிருந்த ராமு என்பவர் அதே ஆண்டு இயக்கத்தில் இருந்து விலத்தி இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருந்த வேளை சுகயினம் ஏற்பட்டு சாவடைந்துள்ளார்,


01/09/1984 அன்று விடுதலைப் புலிகள் நடாத்திய அச்சுவேலி, வசாவிளான் பகுதியில் நடத்திய கண்ணிவெடித் தாக்குதிலில் கவச வண்டி முற்றாக சேதம் அடைந்தது அதில் ஒன்பது இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

 1984 ஆண்டு 09ஆம்  மாதம் இந்தியாவில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின்  ஐந்தாவது பயிற்சி முகாம்பற்றி

அதில் பயிற்சி எடுத்த ஆரம்ப காலப்போராளி மாயா குறிப்பிடுகையில்

நாங்கள் இருநூற்றைம்பது இளைஞர்கள் அங்கே சென்று இருந்தோம். போனவுடனே எங்களின் பயிற்சிக்கான உடைகள் தரப்பட்டதோடு முடி, நகம் அனைத்தையும் வெட்டுமாறு கட்டளை வழங்கப்ட்டது; அதற்கு ஏற்றவாறு நாங்களும் ஒத்துழைப்பு வழக்கிங்கினோம்.

எங்களின் பயிற்சி முகாமிற்கு மேலாளராக லெப். கேணல் பொன்னம்மான் இருந்தார். பயிற்சி முகாம் பொறுப்பாளராக போராளி அத்தி என்பவர் நியமிக்கப் பட்டிருந்தார்.  எங்களிற்கான பாடங்களை பொன்னம்மான் மற்றும் மூத்த போராளிகள் சிலரும் எடுத்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சியை சுக்குளா, போள், முத்து, போராளிவேணு, இவர்கள் தந்தார்கள். அதில் ஒரு போராளி மட்டுமே வருத்தம் காரணமாக இடையில் வெளியேறி விட்டார். ஏனைய இருநூற்று நாப்பத்தொன்பது போராளிகளும் பயிற்சி முடிந்ததும் தமிழீழம் அனுப்பப்பட்டார்கள்; என குறிப்பிட்டார். 


பண்டிதர் யாழ்மாவட்டத் தளபதியாக இருந்த காலத்தில்தான் லெப். பரமேதேவாவின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலும் அவனின் வீரச்சாவும் நடைபெற்றது. யாழ் மாவட்ட முதல் தளபதி கப்டன். பண்டிதர் அவர்கள் வரலாறு, இதே காலப்பகுதியில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது யாழ்.மாவட்டப் பொறுப்பாளராக கப்டன். பண்டிதர் அவர்கள் தலைவரால் நியமிக்கப்பட்டு சிறந்த முறையில் கடமையாற்றிக் கொண்டுயிருந்தார்.

அவன் தனது பதினாறுவயதின் இறுதிலேயே தமிழீழவிடுதலை என்பதில் ஆழமான ஈடுபாடு கொண்டவனாக இருந்திருக்கின்றான். விடுதலைக்கான பாடல்களை எழுதி தனது பாடசாலை கொப்பியில் அழகாக வைத்திருப்பதில் ஆரம்பித்து விடுதலைக்காக ஆயுதப் போராட்ட அமைப்பை ஆரம்பித்திருந்த தேசியதலைவரை 1977ல் சந்தித்து தன்னையும் தலைவருடன் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததுவரை அவனது ஆரம்பம் இருந்திருக்கிறது.
எடுத்தவுடன் எவரையும் தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை கவனித்து அவர்களின் உறுதியை சோதித்து அதன்பின்னரே தன்னுடன் இணைத்துக்கொள்ளும் தலைவரின் இயல்புக்கேற்பவே முதன்முதலாக தலைவருக்கும் பண்டிதருக்குமான அந்த சந்திப்பு இருந்திருக்கிறது.


ஒரு கைத் துப்பாக்கியின் விசையை இழுக்கமுடியாத அளவுக்கு மிகவும் மெலிந்தவனாகவும் இருந்தமையால் “தற்போது நீ !வீட்டபோய் நில் பெரியஆளாக வந்தவுடன் எடுக்கலாம் என தலைவர் அவனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.
மாதக்கணக்கில் ஆரம்பித்து சிலவேளைகளில் வருடக் கணக்குக்கு கூட இப்படி காத்திருக்க வேண்டிவரும். ஆனால் இந்த காத்திருப்பு காலத்தில்தான் ஒவ்வொருவரையும் தலைவர் அடையாளம் காணுவார். உணர்ச்சிவசப்பட்டு விடுதலைக்கு வருபவர்களில் இருந்து உணர்வுபெற்று விடுதலைக்காக வருபவர்களை வடிகட்டி எடுக்கும் தலைவரின் ஆரம்பகால இந்த அணுகு முறைதான் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கும் உறுதியான அத்திவாரத்துக்கும் வலுச்சேர்த்தது.

எழுபத்தெட்டில் பண்டிதரும் அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டான்.எந்தநேரமும் வாட்டிக் கொண்டிருந்த ஆஸ்மா நோயுடன் அவன் விடுதலைக்காக முழுநேரமானான்.
அவன் நிறையவே தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்டான். அவரிடம் இருந்து எளிமை, அவரிடம் இருந்தே ரகசியம்பேணும் தன்மை, அவரிடம் இருந்தே மக்களை ஆழமாக நேசிக்கும் பண்பு, என்று எல்லாமே அவரைப்போலவே அவனும்…… எல்லாவற்றிலும் பார்க்க தலைவரிடத்தில் இருந்த நேர்மைதான் அவனில் இன்னும் ஆழமாக புகுந்துகொண்டது..!
இதனை அவதானித்த தலைவர் 1980 ஆரம்பத்தில் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார்.

அதை விட இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளராகவும் அவனே இருந்தான்.எல்லோருக்கும் மாதம் முதல்திகதியில் அந்த மாதத்துக்கான கொடுப்பனவு பண்டிதரால் கொடுக்கப்பட்டுவிடும். தினசரி சாப்பாட்டுச்செலவு பத்துரூபா வீதம் கணக்கு பார்த்துகொடுக்கப்படும். இந்த பணத்துக்கான செலவுக்கணக்கு மாதமுடிவில் பண்டிரிடம் கொடுத்தால்தான் மறுமாதத்துக்கான பணம் பெறமுடியும். தலைவர் உட்பட அனைவருக்கும் இதே வரையறையைதான் பண்டிதர் வகுத்திருந்தான்.
ஒவ்வொருவரின் கணக்குத் துண்டுகளையும் பார்த்து அதில் இருக்கும் அதிகமான செலவுகளை குறைப்பது சம்பந்தமாக அவர்களுடன் அவன் கதைக்கும் பாங்கு இன்னும் நினைவுக்குள் நிற்கின்றது.

பகல்முழுதும் சைக்கிளில் அங்கும், இங்கும் என்று இயக்கவேலைக்களுக்காகவும், மக்களை சந்திப்பதற்காகவும்,  அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஓடிக்கொண்டே  இருப்பான். இரவு அவன் தங்குமிடத்தில் அனைவரும் தூங்கிய பின்னரும் இவன் தனித்து ஒரு குப்பி விளக்கு ஒளியிலோ மெல்லிய வெளிச்சத்திலோ அன்றைய கணக்குகளை எழுதிக் கொண்டிருப்பான் மிகவேகமாகவே பண்டிதர் அனைவரதும் தேவைகளையும். அனைவரதும் கோரிக்கைகளையும்.  உள்வாங்கி இயக்கத்தை நிர்வகிக்கும் ஒருவனாக ஆகிப்போனான். நிதிபொறுப்பு என்பதைவிட ஆயிரம் மடங்கு கடினமானது ஆயுதபொறுப்பு. அந்த நேரம் இருந்த ஆயுதங்களில் ஒருபகுதி எந்தநேரமும் நிலத்துக்கு கீழாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.

அப்படி புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களின் விபரங்கள் அவை வைக்கப்பட்ட திகதி, மீண்டும் எடுத்து மீளவும் சரிபார்க்கப்பட்டு வைக்கப் படவேண்டிய திகதி, என்று அனைத்தும் அவனால் மிகவும் அழகானமுறையில் எழுதப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கும். ஆனால் என்ன…. அதை வேறுயாருமே படிக்க முடியாது. இத்தகைய ஆவணம் எதிரியின் கையில் கிடைத்தால் அனைத்து ஆயுதங்களும் பிடிபட்டுவிடும் என்பதால் பண்டிதர் ஒரு இரகசிய சங்கேத எழுத்து முறையைக் கண்டு பிடித்தான். அதில்தான் எழுதுவான். இதனை படிக்கக் கூடியவர்களாக இயக்கத்தில் தலைவரும், லெப்.சங்கரும், ரஞ்சன்லாலாவுமே விளங்கினார்கள்.முதலாவது மாவட்டத் தளபதி என்ற பொறுப்பு தமிழீழத்தில் கப்டன். பண்டிதர் என்பவரே யாழ். மாவட்டத்தில் தலைவரால் நியமிக்கப்பட்டார்,

ஆனால் அனைத்து மாவட்டங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இவருக்கு இருந்தது. இவர்! தன்னைப் பொறுப்பாக விட்டதும்;  மிகவேககமாக இயங்கத் தொடங்கினார்,  இராணுவதிற்கு எதிராகப் பல “கொரில்லா” தாக்குதல்களை நடாத்தி இராணுவத்தை கடுமையான முறையில் பயமுறுத்தி வைத்திருந்தார். இவரின் முதலாவது வேலையாக வெளிநாட்டில் இருந்து ஒரு R.P.G உந்துகணை செலுத்தி  ஒன்றை வேண்டி இந்தியா கொண்டுவந்து அதைமிகவும் பாதுகாப்பான முறையில் அதை யாழ்பாணம் கொண்டு வந்தார். ஆனால் முதல் முதலாக இலங்கைக்கு கொண்டுவந்த  R.P.G யும் அதுவாகவே இருந்தது;

ஏனெனில் அந்தக் காலத்தில் இலங்கைப் படைகளிடம் இவ்ஆயுதம் இருக்கவில்லை.அந்தக் காலப்பகுதியில் தான் இந்தக் கதை சிங்கள அரசுக்குக் “காட்டுத்தீ “போல் பரவியது. கண்டம் விட்டுப் பாயும் பெரிய ஆயுதம் ஒன்றை விடுதலைப் புலிகள் பெற்று விட்டார்கள் என்பதே..! அந்த வதந்தியாகும். இந்தத் தகவல் கிடைத்ததும்; இராணுவம் யாழ். குடாவில் பாரிய தேடுதல் வேட்டையை ஆரம்பித்தது. 09//01/1985 அச்சுவேலியிலுள்ள எமது “கொரில்லா” தளமொன்றை தேடிக்கொண்டு இருந்தகாலம் அது… அப்பொழுது தான் அச்சுவேலியில் பண்டிதர் இருப்பதாகத் தகவல் போய் அவ் வாழைத் தோட்டத்தைச் சுற்றி வளைக்கின்றது சிங்களப் படை, அப்போது !அத்தோட்டத்தில்   கப்டன். பண்டிதர், சின்னலோ உட்பட பதினைந்து போராளிகள் அங்கே இருந்தார்கள். உடனே முடிவு எடுத்த பண்டிதர்  சின்னலோவுடன் பத்துப்பேரை எதிரியை நோக்கி சுட்டுக் கொண்டு இருக்குமாறு கட்டளை வழங்கினார். இராணுவத்தை நோக்கி சண்டையிடுமாறு சொல்லி விட்டு தான் அவசர, அவரமாக R.P.G உந்துகணை செலுத்தியை வாழைத்தோட்டத்திற்குள் வெட்டி புதைக்கின்றார் பண்டிதர்.

அது எதிரி எடுக்கக் கூடாது எனத்  தாட்ட இடத்தில் இருந்து வேறு இடம் சென்று அங்கு இருந்து நான்கு போராளிகளுடன் இறுதி தோட்டா இருக்கும் வரை சண்டையிட்டுக்கொண்டே இருந்தார் பண்டிதர்.


பண்டிதரைநோக்கி சிங்களப்படை சுட்டுக்கொண்டு ஓட,  இந்தச் சந்தர்ப்பதைப் பயன்படுத்தி,  சின்ன   லோவுவுடன்  நின்ற  பத்துப் போராளிகளும்,  முற்றுகையை உடைத்து வெளியே செல்கின்றார்கள்…… 
தொடர்ந்து பண்டிதர் இராணுவத்தை நோக்கிச் சுட்டுக்கொண்டு இருக்கின்றார்….. பல மணித்தியாலம் இராணுவத்தைக் களைப்படையச்  செய்து தனது தோட்டா ரவைகள் முடிந்ததும் “குப்பி” கடித்து தன்னோடு நின்ற நான்கு போராளிகளுடன்   09/01/1985அன்று வீரச்சாவைத் தழுவிக் கொள்கின்றார்கள்.”கெரில்லா”  வீரர்களைக் கைநழுவ விட்ட இராணுவத்தினர், அச்சுவேலிக் கிராமத்திலுள்ள ஐம்பது அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து,  அவர்களுக்கு பயங்கவாதிகள் என்ற முத்திரைகுத்தி,  “வெற்றி வாகை” சூடிக் கொண்டனர். இதே காலத்தில் தான் நடக்கக்கூடாத விடயம் ஒன்று நடந்தது.

அடுத்து திருமதி இந்திராகாந்தியின் மரணமும் அதனால் எமக்கு ஏற்பட்ட பின்னடைவையும் விரிவாகப் பார்ப்போம்

தொடரும்
அன்புடன் ஈழமதி

தமிழீழக்கதை (Tamil Eelam of story) தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று ஆவணத்தொகுப்பு

பாகம் இரண்டின் ஆறாவது தொடர்

1984 அக்டோபர் 31 ஆம் நாள் திருமதி இந்திராகாந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.அவரின் இழப்பு பற்றி பாலா அண்ணா குறிப்பிடுகையில்

திருமதி. இந்திராகாந்தியின் திடீர் மரணம் ஈழத் தமிழினத்தை ஆழமான சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழரின் அரசியில் அபிலாசையும், நம்பிக்கையும் இடிந்து நொறுங்கின. கடைகள், பாடசாலைகளை மூடி, வீடுகள் எங்கும் கருப்புக் கொடிகள் பறக்கவிட்டுத் தமிழீழ மக்கள் துக்கம் கடைப்பிடித்தபோது, தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்து நின்ற சிங்களப் படையினர் வீதிகளில் நடனமாடி மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்தனர். தமிழரின் ஆயுதப் போராட்ட இயக்கத்தைப் பொறுத்தவரை திருமதி. காந்தியின் திடீர் மறைவானது ஈடுசெய்ய முடியாத பெரியதொரு தார்மீக சக்தியைத் தமிழரின் சுதந்திர இயக்கம் இழந்து தவித்தது. இந்திரா காந்தி  அம்மையார் ஆழமான ஆளுமையும், மதிநுட்பமும் மிகுந்தவர். இலங்கை அரசியலின் சிக்கலான பரிமாணங்களை நன்கு அறிந்தவர். தமிழ் மக்களின் அரசியற் பிரச்சினையில் ஆழமான அக்கறையும், அனுதாபமும் கொண்டவர். தமிழரின் உரிமைகளையும்,  அரசியல் அபிலாசைகளையும்; வென்று கொடுக்க வேண்டும் என்பதில் உறுதி பூண்டிருந்தவர்.

 சிங்கள அரசியல் தலைவர்களின் மன  இயல்புகளையும், அவர் நன்கு புரிந்து வைத்திருந்ததால் அவர்களை அச்சமூட்டிப் பணியவைக்கும் தந்திரங்களையும் கையாண்டு வந்தார். வங்காளதேசம் தனியரசாக உருப்பெற்றமைக்கு இந்திரா காந்தியின் பங்களிப்புக் காரணமாக இருந்த வரலாற்றை ஜெயவர்த்தனா நன்கு அறிந்திருந்தார்.தமிழரின் இனப் பிரச்சினையிலும் திருமதி. காந்தி தலையிட்டுத் தமிழருக்குத் தனியரசை உருவாக்கிக் கொடுக்கலாமென ஜெயவர்த்தனாவுக்கு அச்சம் இருந்து வந்தது. ஜெயவர்த்தனாவின் இந்த அச்சம் பற்றி “திரு.டிக்சிட்” குறிப்பிடுகையில்! “திருமதி காந்தி உயிரோடு இருந்திருப்பாராயின் 1985 ஆம் ஆண்டிலேயே இலங்கையை இரு நாடுகளாகப் பிளவுபடுத்தியிருப்பார், என்று ஜெயவர்த்தனா என்னிடம் அச்சம் தெரிவித்தார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

“எமது விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த சுதந்திரப் போராளிகளுக்கும்,  சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கும்; மத்தியில் பகை நடவடிக்கைகளை நிறுத்தும் நோக்குடன் இந்திய அரசினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைத் திட்டத்தை நாம் மிகவும் கவனமாகப் பரிசீலனை செய்தோம். இந்திய அரசின் மத்தியஸ்துவத்தையும்,  நல்லெண்ண சமரச முயற்சிகளையும்,  மனமார வரவேற்று,  எமக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளையும், உத்தரவாதங்களையும், ஏற்றுக்கொண்டு,  ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் போர் நிறுத்தம் செய்வதென,  இம்மகஜரில் கைச்சாத்திட நாம் கூட்டாக முடிவெடுத்துள்ளோம். எமது முடிவு ஒரு நல்லெண்ண சூழ்நிலையையும்,  இயல்பு நிலையையும் உருவாக்கிக் கொடுக்கும் என நம்புகிறோம். இந்தச் சமரசப் புறநிலையை ஏதுவாகக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கு மென எதிர்பார்க்கின்றோம். இத்தீர்வுத் திட்டம் எமக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக; அமைந்திருந்தால் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியற் தீர்வு காண்பது குறித்துப் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம்,

“ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்குப் போர் நிறுத்தம் செய்ய நாம் இணங்கிய போதும்,  போர் நிறுத்த உடன்பாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும், எமக்கு அனுகூலம் அற்றவையாகவே உள்ளன. இவை குறித்து எமது கருத்துக்களையும், மாற்று யோசனைகளையும்; இங்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்”.

“போர் நிறுத்தம் பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து, அரசியற் தீர்வு குறித்து ஒரு விபரமான உருப்படியான திட்டத்தைச் சிறீலங்கா அரசாங்கம் முன்வைக்க வேண்டும்,  என்பதே எமது நிலைப்பாடாகும். இந்த அரசியல் தீர்வுத்திட்டம் எம்மால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்தால் மட்டுமே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமாக நாம் எடுத்துக்கூற விரும்புகின்றோம். தமிழரின் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்க மறுத்து, காலம் காலமாக மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள அரசுகள்,  தமிழ் மக்களை ஏமாற்றி இழைத்த நம்பிக்கைத் துரோகத்தின் கசப்பான வரலாற்று அனுபவத்தின் அடிப்படையிலேயே நாம் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்”.   “அத்துடன் சிங்கள அரசுகள் தமிழ்த் தலைவர்களோடு செய்து கொண்ட உடன்பாடுகள், ஒப்பந்தங்களை நிறைவு செய்யாது முறித்துக் கொண்டமையும் உலகறிந்த உண்மை. அது மட்டுமின்றி தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதைத் தட்டிக் கழித்து, இழுத்தடிக்கும் ஒரு மோசமான நடைமுறையையும்; சிங்கள அரசு கடைப்பிடித்து வருகிறது என்பதையும், நாம் இங்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஆகவே! இந்த ஏமாற்று அரசியல் வித்தையில் நாம் பலிக்கடாவாக விரும்பவில்லை. அதனால்தான் பேச்சுக்களில் பங்குகொள்வது பற்றி நாம் தீர்மானிப்பதற்கு முன்பாக ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள அரசு முதலில் எமது பரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென நாம் கோருகின்றோம்”.

ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் புதுடில்லியில் சாதகமான வரவேற்பைப் பெறவில்லை. டில்லியிலிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட “திரு.சந்திரசேகரன்” எமது  நிலைப்பாட்டில் இந்திய அரசு அதிருப்தி கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குச் சிறீலங்கா அரசு மீது ஈழத் தேசிய விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனையை விதித்துள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சு கருதுவதாகவும் அவர் விளக்கினார். எமது மகஜர் குறித்து இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை நான் பிரபாகரனிடம் எடுத்துக் கூறினேன்”.

“இப்பிரச்சினை குறித்து முன்னணித் தலைவர்கள் அவசர சந்திப்பு ஒன்றை நிகழ்த்திக் கலந்துரையாடினர். பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னராக இலங்கை அரசு ஒரு உருப்படியான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டுமென்ற எமது நிலைப்பாட்டில் நாம் உறுதி பூண்டு நிற்கவேண்டும்! என பிரபாகரனும், ஏனைய கூட்டணித் தலைவர்களும் ஏகமனதாக முடிவெடுத்தனர்”. “முன்னணித் தலைவர்களின் முடிவை திரு.சந்திரசேகரன் மூலமாக நான் டில்லிக்குத் தெரியப் படுத்தினேன். எமது விடாப்பிடியான நிலைப்பாடு குறித்து ஆத்திரமடைந்த ”  “சந்திரசேகரன்” பிரபாகரனையும்  ஏனைய கூட்டணித் தலைவர்களையும் விரைவில் இந்திய அரசு டில்லிக்கு அழைத்துத் தனது அதிருப்தியை நேரில் தெரியப்படுத்தும் என எச்சரித்தார்”. “ராஜீவ் அரசுக்கும், தமிழ் விடுதலை அமைப்புகளுக்கும் மத்தியில் நேரடியான முரண்பாடும், மோதலும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது போல எனக்குத்தென்பட்டது இப்படி பேர்ச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க தேசியத் தலைவருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என சில மூத்த போராளிகளின் கருத்தாகயிருந்தது, இது அதற்கு அமைவாக

“01/10/1984 அன்றுதேயத்தலைவர் அவர்களிற்கும் செல்லி மதி  அவர்களிற்கும் திருமணம் நடைபெற்றது

01/10/1984 தலைவர் பிரபாகரனிற்கு இந்தியாவில் உள்ள திருப்பூர் முருகன் கோயிலில் வைத்து சில குறிப்பிட்ட ஆதரவாளர்கள் முன்னிலையில் சமய முறைப்படி சட்டரீதியாக புங்குடிதீவைச் சேர்ந்த மதிவதனி என்பவருக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும்  திருமணம் நடைபெற்றது.இவர்களிற்கு முதலாவது மகனாக சால்ஸ் அன்ரனியும் இரண்டாது மகளாக துவராகாவும் மூன்றாவது மகனாக வன்னியில் பிறந்தவரான பாலச்சந்திரன் ஆகும்இவர்களிற்கு என்ன நடந்தது என்பதை பின்னர்பார்ப்போம்

 

 19/11/1984 அன்று கட்டுவன் பதியிலும் மேலும் பல இடங்களில் சிறு சிறு தாக்குதல்கள் நடைபெற்றது 

அன்று கட்டுவன் தெல்லிப்பளை வீதியில் உள்ள வறுத்தலைவிளானில் வைத்து வாகனம் மீது நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் அத்தாக்குதலில் பிரிகேடியர் ஆரியபெருமாள் உட்பட ஒன்பது இராணுவத்தினர் சொல்லப்பட்டனர்.


18/12/1984 அன்று புல்மோட்டையில் விடுதலைப் புலிகள் நடத்திய நிலக் கண்ணிவெடி தாக்குலில் ஒரு டிரக் வண்டி சேதம் அடைந்தது; இரண்டு உயர் அதிகாரிகள் உற்பட முப்பத்தைந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.எமது தரப்பில் இரண்டு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர்


15/02/1985   – (6) ஆறாவது பயிற்சி முகாம் பற்றி அதில் பயிற்சி எடுத்தபோராளி நாடன்  குறிப்பிடுகையில்,

 15/02/1985/ தொடங்கி 15/10/1985 வரை பயிற்சி முடிந்தது.

” எமது பயிற்சிமுகாமிற்கான இளைஞர்களை  தமிழீழம் இருந்து பொறுப்பாளர் குண்டப்பாவே படகு மூலம் கொண்டு வந்தார். அதில் என்னோடு சேர்த்து சுமார் முன்னூற்று அறுபது போராளிகள் அப் பாசறைக்கு வந்து சேர்ந்தோம்.
15/10/1985 அன்று எங்களின் ஆரம்ப இராணுவ பயிற்சி ஆரம்பம் ஆனது, 

பயிற்சி முகாம் அமைந்த இடம் மணியண்ணையின் தோட்டம் கும்புறுப்பிட்டி சேலம் மாவட்டம் , அதில் பயிற்சிக்கான பிரதான பொறுப்பாளராக தளபதி பொன்னம்மான் இருந்தார்.ஆறாவது  பயிற்சி முகாமிற்கான பொறுப்பாளராக  லூக்காஸ் அம்மான் இருந்தார். பயிற்சிகளை மேற்பார்வை செய்வதற்காக மேலாளர்  மேனன் இருந்தார்.


எங்களுக்கான போராட்ட ரீதியான வகுப்புக்களை மாதவன் மாஸ்டர் மற்றும் இந்திரன் இருவரும் எடுத்தார்கள். எங்களிற்கான உடல் பயிற்சி ஆசிரியராக றோய் அவர்கள் இருந்தார். எங்களோடு பயிற்சி எடுத்தவர்களில் எனது ஞாபகத்தில் உள்ளோர், யோகரெத்தினம் யோகி, திலீப், றகீம், பன்னீர், புஸ்பன், பத்மன், முஸ்த்தப்பா, கலா, பாரத், ராம், நவாஸ், நளன். இவர்கள் என்னோடு பயிற்சி எடுத்தார்கள். முந்நூற்று அறுபது பேருக்கும் சிறப்பான முறையில் பயிற்சி முடிந்தது. தலைவர் அவர்கள் திடீர், திடீர்ரென வந்து பொறுப்பாளர்களோடு கதைத்து விட்டுச் செல்வார்.பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு போராளிகளோடும் தலைவர் தனித்தனியாகக் கதைத்தார். அதில் என்னோடும் அவர் கதைத்தார்.அடுத்து சிறு ,சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அனைவரும் தமிழீழம் அனுப்பப்பட்டோம்.

எங்களுக்கு பயிற்சி தந்த “றோய்” அவர்கள் பயிற்சி முகாம் முடிந்த பின் தமிழீழம் சென்று அங்கே சிங்களப் படையோடு சண்டையிட்டு காயம் அடைந்து மீண்டும் மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா கொண்டு வரப்பட்டு  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் வீரச்சாவு அடைந்தார். அவரின் வித்துடல் அப் பயிற்சி முகாமிலே அடக்கம் செயப்பட்டது என அவர் குறிப்பட்டார்

.இனி பால அண்ணா சொல்வதைப்பார்போம்

இதே காலப்பகுதியில் விடுதலைப் புலிகளும் மற்றும் வேறு ஈழப் போராளி அமைப்புக்களும் வட கிழக்கில் இராணுசத்திற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருந்தார்கள் இதனால் நாள் ஒன்றுக்கு சராசரி 100 இராணுவம் செத்துக்கொண்டுயிருந்தனர், இதனால் இந்தியாவின் காலில் விழுந்தது இலங்கை அரசு எப்படியாவது புலிகளுடன் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்படுத்துங்கள் என்பதே அவர்களின் அழுத்தமாகயிருந்தது, விரும்பியோ விரும்பாமலே அவ் உதவியை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய தள்ளப்பட்டது, ஏனனில் இந்திய செய்ய மறுத்தால் இலங்கை வேறு நாடுகளிடம் போய் அவ் உதவியை வேண்டினால் இந்தியவின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாக அமையலாம் என இந்தியபயந்தது அதனால் புலிகளை வலுக்கட்டாயமாகப் பேச்சுக்கு இழுத்தது இந்திய,

03/07/1985திம்பு பேச்சுவார்த்தைக்கு புலிகளை இழுக்கும் பொறிமுறையை உருவாக்கிய இந்தியா.

*****************************”************************************

 “1985 ஆம் ஆண்டு யூ லை மாதம் 3 ஆம் நாள், பிரபாகரனும், நானும், ஏனைய கூட்டணி அமைப்புகளின் தலைவர்களும், அவர்களது அரசியல் உதவியாளர்களும், இந்திய இராணுவ விமானம் மூலம் புது டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தலைநகரின் மையத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டோம்”

. “நாம் அங்குச் சென்றதும் “றோ” புலனாய்வு அதிகாரிகளும், இந்திய வெளியுறவு அமைச்சைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், மாறி மாறி எம்மைச் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு குறித்து விளக்கவுரைகள் அளித்தார்கள். தமிழ்ப்புரட்சி அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜெயவர்த்தனாவை இணங்க வைப்பதற்கு, ரொமேஸ் பண்டாரி மேற்கொண்ட இராஜதந்திர சாணக்கியத்தைப் பாராட்டினார்கள். இந்தியாவுக்கு இது ஒரு இராஜதந்திர வெற்றி எனக் குறிப்பிட்ட அவர்கள்;”

 “இதன் மூலம் தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறினார்கள்.

“ஈழத் தேசிய விடுதலை முன்னணித்” தலைவர்கள் சிறீலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு எவ்வித நிபந்தனையும்  விதிக்கக் கூடாது என்பதே! இந்த விளக்கவுரையின் அடிநாதமான வேண்டு கோளாக அமைந்தது”

இந்திய அரசு அதிகாரிகளின் அறிவுரைகளும், அழுத்தங்களுக்கும் பிரபாகரனும் சரி, ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் சரி,  பணிந்து இணங்கிப் போகவில்லை.

எல்லோருமே ஒருமித்த கருத்துடன் தமது நிலைப்பாட்டில் உறுதிபூண்டு நின்றனர். முடிவின்றி இழுபட்டுக் கொண்டிருந்த இப்பிரச்சினை இறுதியாக “றோ” புலனாய்வுத்துறை அதிபர் திரு. “சக்சேனா”விடம் கையளிக்கப்பட்டது.

“புதுடில்லியிலுள்ள தனது தலைமைச் செயலகத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தார் திரு.”சக்சேனா”. பல மாடிகளைக் கொண்ட வானளாவிய பிரமாண்டமான கட்டிடம்! கட்டிட வாசலிலே ஆயுதம் தரித்த “கரும்பூனை அதிரடிப் படைவீரர்கள்” எம்மைச் சூழ்ந்து கொண்டு; உயர்மாடியில்  உள்ள “சக்சேனா”வின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்”

. “கடுமையான முகத்துடன், முறைப்பான பார்வையுடன்; எமக்காகக் காத்திருந்தார்”றோ” அதிபர். அவரது அகன்ற மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் பிரபாகரனும், நானும், மற்றும் ரெலோ தலைவர் சிறீசபாரெத்தினம், ஈரோஸ் தலைவர் பாலகுமார், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா ஆகியோர் அமர்ந்து கொண்டோம். முதலில் தனது உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தனது வழக்கமான பாணியில், கனத்த குரலில் நேரடியாகவே விடயத்திற்கு வந்தார்.” தமிழரின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நேர்மையான முயற்சிக்குத் தமிழ்த் தீவிரவாதத் தலைவர்கள் கட்டாயமாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! என வலியுறுத்திக்கூறிய திரு. “சக்சேனா” ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

உங்களது விட்டுக்கொடுக்காத கடும்போக்கைப் புதிய இந்திய அரசு பொறுத்துக்கொள்ளாது, 

உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் பாதுகாப்பான புகலிடச் சலுகைகளை மறுக்கவும் தயங்காது, என மிரட்டினார் “சக்சேனா”. பூட்டான் தலைநகரமான “திம்புவில்” இன்னும் இரு வாரங்களில் பேச்சக்கள் ஆரம்பமாக உள்ளன. இப்பேச்சுக்குள் நிபந்தனையற்ற முறையில் நடைபெறும்  பேச்சுக்களில் பங்குபற்ற நீங்கள் மறுத்தால்! இந்திய மண்ணிலும்,  இந்திய கடற்பரப்பிலும், நீங்கள் செயற்பட முடியாது போகும் என்று கண்டிப்பான குரலில் கத்தினார். 

நான் வசனத்திற்கு வசனம் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன்.

ஆத்திரத்தை விழுங்கியபடி துயரம் தோய்ந்த முகங்களுடன் “சக்சேனா”வை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் போராளி அமைப்புகளின் தலைவர்கள். ஏதோ சொல்வதற்காக வாயசைத்தார் பத்மநாபா;

ஆனால் சப்தம் வெளிவராது தொண்டைக்குள் மடிந்து போயிற்று. மௌனம் சாதித்தபடி ஆழமான சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாரகன். கெரில்லாத் தலைவர்களின் கொதிப்புணர்வைப் புரிந்து கொண்ட சக்சேனா; “நான் கூறியவற்றை நீங்கள் ஆழமாகப் பரிசீலனை செய்து, ஆக்கபூர்வமான பதிலை நாளைய தினம் கூறினால் போதும் என்றார்”.அத்துடன் கூட்டம் முடிவுக்கு வந்தது.

நாம் அனைவரும் விடுதிக்கு திரும்பிய உடனேயே ஒரு அவசரக் கலந்துரையாடலை நிகழ்த்தினோம்.

தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிவித்தார் பிரபாகரன். பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்து வீணாக இந்திய அரசைப் பகைத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. பேச்சுக்களில் பங்குகொண்டு எமது போராட்ட இலட்சியத்தைக் கைவிடாது,  எமது அரசியல் கொள்கையை எதிரியிடம் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது “என்னைப் பொறுத்தவரை இந்திய அரசைப் பகைக்காமல் ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுக்களில் கலந்து கொள்வதுதான் சிறந்த வழி என்றார் பிரபாகரன்”. அவரது நிலைப்பாட்டையே நானும் ஆதரித்தேன். ஏனைய அமைப்புகளின் தலைவர்களும் புலிகளின் தலைவரது கருத்தை ஏகமனதாக ஆதரித்தனர்.

 நிபந்தனையற்ற முறையில் சமாதானப் பேச்சுக்களில் பங்கபற்றுவது என்ற ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைமையின் முடிவு மறுநாள் இந்திய அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதாவது!  தமிழ் விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு வழங்கி வந்த சகல இராணுவ உதவிகளையும்,  இந்திய அரசு நிரந்தரமாக நிறுத்தவிட வேண்டுமென்றும்,  தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தமிழ் அமைப்புகளை நிர்ப்பந்திக்க வேண்டுமென்றும்,  ஒரு கண்டிப்பான நிபந்தனையை விதித்தார். இந்த நிபந்தனையை நிறைவு செய்வதாக இந்திய அரசு உறுதியளித்ததை அடுத்துப் போர்நிறுத்தம் செய்வதற்கு ஜெயவர்த்தனா இயங்கினார். போருக்கு ஓய்வு கொடுப்பதும் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்குமான நாட்களும் நிர்ணயிக்கப்பட்டன. தமிழ் விடுதலை இயக்கங்களுக்கும், சிறீலங்கா அரசுக்கும் மத்தியில் 1985 யூன் நடுப்பகுதியில் போர் நிறுத்தத்தைச் செயற் படுத்துவது என்றும்   இந்திய அரசின் மத்தியஸ்துவத்தின் கீழ் மூன்றாம் நாடான இமாலய இராச்சியமான பூட்டானில் யூலை நடுப்பகுதியில் பேச்சுக்களைத் தொடங்குவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. மாற்று இயக்கங்கள் “திம்பு”பேச்சுவார்த்தையில் எதிர்ப்பு தெரிவிக்காமை எமது அமைப்பிற்கு ஒரு ஏமாற்றமாக இருந்தது. 

13/07/1985 பூட்டான் திம்புவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஈழப் போராளிகள் இந்திய  மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இதில் எமது தரப்பில் அன்ரன் மாஸ்ட்டர், திலகர், பேவி அண்ணை இதை ஒழுங்குபடுத்தியவர்  பாலா அண்ணை.

  “புளொட்”சார்பாக திரு வாசுதேவா இவர் லெப்.பரமதேவாவின் அண்ணன் ஆவார். E.P.R.L.P சார்பாக வரதராஜப்பெருமாள், ரெலோ சார்பாகப் போனது திரு.சாள்ஸ், நடுவர் சத்தியஜேந்திரா  லோயர், ஈரோஸ் சார்பாக திரு சங்கர், தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பாகப்போனது சம்மந்தர். இலங்கை அரசாங்கம் சார்பாக ஏச். யெ. ஜேவர்த்தனா, இந்தியா சார்பில் “றோ” அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

கருணாநிதியின் கருத்தைப் பின் தொடர்பவர்களான மாற்று அமைப்புக்கள்,  இலங்கை தமிழர்களிற்கான தீர்வு மாகாணசபை அதாவது வடகிழக்குக்கு தனித்தனி முதல் அமைச்சர்கள் என்பதே! அவர்களின் எதிர்பார்ப்பாக அமைந்தது.

 எமது அமைப்புச் சார்பான அன்ரன் மாஸ்ட்டர் அவர்கள் தமிழீழமே இலங்கை தமிழர்களிற்கான நிரந்தரத் தீர்வாக அமையும், என தெரிவித்தார்கள்.

அதற்கு இந்திய அதிகாரிகள்! “சிறுபாண்மை நீங்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள் நீங்கள் இரண்டாகப் பிரித்தால் அவர்கள் மற்றும் சிறுபாண்மை முஸ்லிம்கள் உள்ளார்கள் அதனால்!  மூவின மக்கள் வாழும் பிதேசமாக கிழக்கு இருக்கட்டும்; வடபகுதியில் மட்டும் ஒருமுதலமைச்சர் இருப்பார்; அது தமிழர்களாகதான் இருக்கும்”  என தெரியப்படுத்தினர். 

ஆனால் பேச்சு வார்த்தைக்குப் போக முன்னரே எம்.ஜி.ஆர் தலைவருக்குச் சொன்ன விடயம் இதுதான் “தமிழீழத்தை தவிர எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ளாதே! எக்காரணம் கொண்டும் கருணாநிதியோடு உறவு வைத்துக்கொள்ளாதே!

அப்படி வைத்தால் எந்த விடயத்திற்கும் என்னிடம் வர வேண்டாம்” என சொல்லி இருந்தார்.இது எமது தரப்பிற்கு நன்கு தெரியும், அதனால் அவர்கள் இறுக்கமாக நின்றார்கள். பேச்சுவார்த்தை முன்னேற்றம் இன்றி முடிவடைந்தது. நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக தலைவர்  வெளிப்படையான அறிக்கையை மக்களிற்கு தெரியப்படுத்தினார். அதைப் பாருங்கள்…! திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு;

திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு காலத்தின் தேவை கருதி .!

“எமது தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒரு உள்நாட்டு நெருக்கடியாகத் தோன்றிய எமது பிரச்சினை இன்று உலகத்தை ஈர்க்கும் ஒரு சர்வதேச நெருக்கடியாக  விஸ்வரூபம் கொண்டுள்ளது.”

“சிங்கள அரசானது எம்முடன் தனித்து நின்று போராடவில்லை. ஏகாதிபத்திய நாசகார சக்திகள் அனைத்தையும் தனக்குப் பக்கபலமாக அணி திரட்டி எமது மக்களுக்கு எதிராக ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடாத்தி வருகிறது, எமது கோரிக்கை என்ன? எமது அரசியல் இலட்சியம் என்ன? என்பதில் நாம் மெளனமாக இருந்து விடவில்லை . எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிய திட்டம் ஒன்றை நாம் முன்வைத்தோம்.” 

“நாமொரு தேசிய இனம் என்ற ரீதியிலும், வரலாற்று ரீதியாக அமைந்த எமது பரம்பரைத் தாயக பூமி எமது சொத்துடமை என்பதாலும், எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை எமக்குண்டு! இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே;

 எமது தனியரசுப் போராட்டம் அமைந்திருப்பதால் எமது போராட்டம் நியாயமானது என்பதை விளக்கியிருந்தோம்.”

“தேசிய சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டம் நீண்ட வரலாற்றையுடையது. பல வடிவப் போராட்டங்களால் பரிணாமம் பெற்றது. காந்தியப் பாதையில், அமைதிவழிப் பாதையில், மொழிஉரிமை கோரி, சமஉரிமை கோரி, சமஷ்டி கோரி, நடைபெற்ற அகிம்சை வடிவப் போராட்டங்கள் அனைத்துமே எதிரியின் இராணுவ ஒடுக்கு முறையால் அடக்கியொடுக்கப்பட்டன”.

“இறுதியில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தனியரசுக் கோரிக்கை பிறந்தது. அது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவம் பெற்றது.”

“இப்படியாக தமிழரின் அரசியல் போராட்ட வரலாற்றின் உச்ச கட்டமாகவே தமிழீழக் கோரிக்கையும்; அதனை அடையும் மார்க்கமாக ஆயுதப் போராட்டமும், பரிணமித்தது என்பதை விளக்கியிருந்தோம்”.

“தமிழீழ மக்களின் தேசியத்திற்கும்,தாயகத்திற்கும் தேசிய சுயநிர்ணய உரிமைக்கும்,  உத்தரவாதம் அளிக்கப்படாத எந்தவொரு தீர்வையும், நாம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதே நமது உறுதியான நிலைப்பாடாக இருந்தது.ஆனால்! சிங்கள அரசு எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கள இனவாத ஆட்சியாளர் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெட்டத் தெளிவாகியுள்ளது. எமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் பூதாகரமாகத் திரிபுபடுத்திக் காட்டி.  சுதந்திரப் போராளிகளை வன்முறைப் பித்தர்களாகச் சித்தரித்துக் காட்டியும், இராணுவரீதியாக எம்மை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்”.

“இந்த இலக்கில் அவர்கள் முழுச்சிங்கள தேசத்தையுமே இராணுவ மயமாக்கி வருகிறார்கள். பெரியதொரு இனயுத்தத்திற்கு ஆயத்தங்கள் செய்து வருகின்றனர். தர்மமும், உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்க அதுவே எமது பலம் .அதர்மமும், பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்திருக்க, அதுவே அவனின்பலவீனம்”.

“ஈற்றில் வெற்றி கொள்வதுநாம். ஏனெனில் என்றும் அழியாத தர்மம் எமக்குப் பக்கபலமாக இருக்கின்றது”.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு .வே .பிரபாகரன் அவர்கள் 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பூட்டான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமைக்கு இந்தியா ஈழத் தமிழர்கள் மீது வைத்து இருக்கும் சந்தேகமே காரணம்.

“கொலம்பேஸ்” என்பவரால் அத்துமீறி அமெரிக்காவின் செவ் இந்தியர்களின் நாட்டைப்பிடித்து அங்கு இருந்த செவ் இந்தியர்களை கொலை செய்த பின்னர் அமெரிக்கா என்ற நாட்டை அவர் உருவாக்கினார்.

 அதையடுத்து இங்கிலாந்தில் உள்ள முதலாளி மற்றும் செல்வந்தர்கள் அனைவரும் இங்கிலாந்தில் இருந்து நிரந்தரமாக அமெரிக்காவிற்குக் குடியேறினார்கள். 

அதனால் சில குறிப்பிட்ட காலம் இங்கிலாந்து ஒரு வறிய நாடாக இருந்தது மட்டும் அல்லாமல், அனைத்து தேவைகளிற்கும் அமெரிக்காவிடமே கை ஏந்த வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.அது போல் இலங்கையில் தமிழீழம் என்பது அமைந்தால்!  குறிப்பா தமிழகத்தில் இருக்கும் முதலாளிமார்களும், செல்வந்தவர்களும் தமிழீழத்திற்கு நிரந்தரமாகாகக் குடியேறி விடுவார்கள். அப்படி நடந்தால்!  இந்தியா ஒரு வறுமையான நாடாகப்போய்விடும். இரண்டாவது ….தமிழீழம் ஒரு பொருளாதார நாடாக வழர்ச்சி அடைந்தால்! தமிழக இளைஞர்கள் தமிழீழத்தின் உதவியோடு ஆயுதப் போராட்டம் அல்லது அகிம்சை  வழியூடாகப் போராடி இந்தியாவில் இருந்து தமிழகம் தனி நாடாகப் பிரியலாம்… என சந்தேகக் கண்ணோட்டத்தால் தொடர்ச்சியாக  இந்தியா ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவே செயல்பட்டுள்ளது.

 இது தமிழகத்தில் வாழும் புத்திஜீவிகளிற்குத்  தெளிவாகத் தெரியும்.

அதைவிட தமிழகத்தில் வாழும் ஐம்பது வீதமான மக்களிற்கும் இது தெரியும். அதனால் தான் அவர்கள் தொடர்ந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வந்தார்கள் . ஒரு கட்டத்தில் இந்திய அரசிக்கு ஆதரவான ஒரு தமிழர் தலைவரிடம் கேட்ட கேள்வி “தமிழீழம் என்று ஒரு நாடுஅமைந்தால் இந்தியாவில் வாழும் தமிழர்கள் இங்கே வந்து நிரந்தரமாகக் குடியேற அனுமதி வழங்குவீர்களா”? பதில் ” தமிழீழம் அவர்களின் தாய் நாடு அவர்களை வர வேண்டாம்! என சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை. எங்கே? வாழ வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள்”. என பதில் அளித்தார் தலைவர். இப்படியான அவரின் ஒளிவுமறைவு இல்லாத தன்மையே அவர்கள் பயப்பிடக் காரணமாக இருந்திருக்கலாம் .

அடுத்து…… இந்தியா எதிர்பார்த்த விடயம்!

இலங்கையில் ஒரு உள்நாட்டுப் போர் தொடர்ந்து  நடந்து கொண்டே இருந்தால்;  கடல் மார்க்கமாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் இலங்கை செல்ல பயப்பிடுவார்கள். அவர்கள் இந்தியாவிலே தரித்து நின்று செல்வார்கள். மற்றும் உல்லாசப் பயணிகளும் இந்தியாவையே விரும்புவார்கள். அதனால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 

அதை விட உள்நாட்டு யுத்தம் தொடர்ந்து நடந்துகொண்டுயிருந்தால்,

அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் தளம் அமைக்க விரும்ப மாட்டார்கள். அதைவிட இலங்கை ஒரு வறிய நாடாக இருந்து தொடர்ந்து இந்தியாவிடம் பிச்சை எடுக்க  வேண்டும் என இந்தியா விரும்பியது.இறுதியில் ஏன்?  இந்தியா விடுதலைப் புலிகளை அழித்தது. போராட்டம் 30 வருடம் நீண்டு கொண்டு செல்வதாலும், விடுதலைப் புலிகள் ஒரு மரபுவழி இரானணுவமாக மாறிவருவதினாலும்;  இன்னும் ஒரு 30 வருடம் நீடிக்குமானால், தமிழீழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது என்பது இந்தியாவிற்கு நன்குதெரியும். அதனால்தான் ஆயுதங்களையும், இந்திய இராணுவத்தையும்; இலங்கைக்குக் கொடுத்து 2009 விடுதலைப்புலிகளை அழிக்க இந்தியா துணை போனது. இது அனைத்துத் தமிழர்களுக்கும் தெரியும். ஆனால் அவர்களிடம் எவ்விதமான பலமும் இல்லையென்பதுதான் உண்மை.ஆனால் தமிழீழம் என்று ஒரு நாடுஅமைந்தால் தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்பதை அவர்கள் அறியும் நாள் வெகுதூரம் இல்லை, 

    அடுத்து இந்தியாவில் நடந்த பெண் போராளிகளிற்கான பயிற்சி முகாம் பற்றிப் பார்ப்போம்

தொடரும்

அன்புடன் ஈழமதி

a 295 பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்

  பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந...